சரபங்கா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சரபங்கா நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சரபங்கா நதி
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
நகரங்கள் டேனிஷ்பேட்டை, ஓமலூர், தாதாபுரம், எடப்பாடி, புதுப்பாளையம்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் சேலம், இந்தியா
கழிமுகம்
 - அமைவிடம் சேலம், இந்தியா
 - elevation மீ (0 அடி)

சரபங்கா ஆறு (Sarabanga River) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறின் மூலமானது சேர்வராயன் மலை ஆகும்.

சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவமியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது என்பர். ஓமலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேர்ந்து இந்த ஆறு உருவாகிறது. அவ்வோடைகள் இரண்டும் கீழ் ஆறு, மேல் ஆறு என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. கீழ் ஆற்றைப் பெரியாறு என்றும் அழைப்பர். இது சேர்வராயன் மலையிலுள்ள ஏற்க்காட்டில் தோன்றுகிறது. இவ்வாறு ஏற்க்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் அருவியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது.[1]

மற்றாேர் ஆறாகிய மேல் ஆறு சேர்வராயன் மலையின் தென்சரிவில் தோன்றிக் காடையாம்பட்டி மலைப் படுகையின் வழியாக ஓடிவருகிறது. பட்டிப்பாடி ஆறு, பறியன் குழி ஆறு, கூட்டாறு, காட்டாறு எனப் பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன. இருப்புப் பாதையைக் கடந்தவுடன் இவ்வாறு தெற்கு நோக்கித் திரும்பியோடிப் பெரியாற்றில் கலக்கிறது. இவ்விதமாக இவ்விரண்டு ஆறுகளால் உண்டாக்கப்பட்ட சரபங்க நதி இடைப்பாடி, குமாரபாளையம் ஆகிய ஊர்களுக்கு அண்மையிலுள்ள பல ஏரிகளை நிரப்புகிறது.[1]

மேலும் இந்த ஆறு சேலத்தில் டேனிஷ்பேட்டை கிராமத்தின் விவசாய நீர்ப்பாசனத்தின் தேவையை நிறைவேற்றுகிறது. பின்னர் இந்நதி ஓமலூர், தோப்பூர்,சின்னப்பம்பட்டி, தாதாபுரம், எடப்பாடி, செட்டிப்பட்டி, பெருமாச்சிப்பாளையம், தேவூர் வழியாக பாய்கிறது. பிறகு அண்ணாமார் கோவில் அருகே காவேரி ஆற்றில் இணைகிறது. ஆற்றின் குறிக்கே பல தடுப்பு அணைகள் உள்ளன. மேலும் இந்த நதியானது நல்லவீரன் காடு பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. ஓமலூர் பகுதியில் உள்ள இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் திகழ்கிறது. அதேபோல் இன்நதிக்கரையில் தாதாபுரம் பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியமமன் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரஸ்த்தி பெற்ற அம்மனாகவும் திகழ்கிறது. நதிக்கரையில் ஏழு சிவாலயங்கள் உள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 13-50". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரபங்கா_ஆறு&oldid=3702840" இலிருந்து மீள்விக்கப்பட்டது