சஜ்ரா மற்றும் கோஜ்ரா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஜ்ரா மற்றும் கோஜ்ரா (Sajra and Gojra Forts) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் வேலூர் நகரத்தின் கிழக்கே நாமம் மலையின் மேல் கட்டப்பட்ட கோட்டைகள் ஆகும். சஜ்ரா மற்றும் கோஜ்ரா என்பதற்கு முறையே "புத்திசாலியானது" மற்றும் "அழகானது" என்று பொருள்.

வரலாறு[தொகு]

1678 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜியின் இராணுவத்தால் வேலூர் கோட்டை முற்றுகையிடப்பட்டபோது, வேலூர் கோட்டையின் தளபதி அப்துல்லா கான் ( அபிசீனியன் ) கோட்டையை பாதுகாத்தார். சத்ரபதி சிவாஜி தனது படைத்தலைவர் சப்னிஸ் நர்ஹரி ருத்ரா என்பவரை 2000 குதிரைப்படை மற்றும் 5000 காலாட்படையுடன் முற்றுகையைத் தொடர நியமித்தார். முற்றுகை பதினான்கு மாதங்கள் நீடித்தது. வேலூர் கோட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள மலை உச்சியில் சஜ்ரா மற்றும் கோஜ்ரா என்ற இரண்டு சிறிய கோட்டைகளை அவர் கட்டினார். இந்த கோட்டைகளிலிருந்து வேலூர் கோட்டை ஆதிக்கம் செலுத்தப்பட்டது . வேலூர் கோட்டையை பாதுகாத்த 500 வீரர்களில் 400 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. வேலூர் கோட்டையை பாதுகாத்து வந்த அப்துல்லா கான் 1678 ஆகஸ்ட் 21 அன்று சரணடைந்தார். பின்னர், மராட்டியப் பேரரசு வேலூர் கோட்டையை பலப்படுத்தி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது. [1]

மேலும் காண்க[தொகு]


குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]