கோணமனேனி அமரேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோணமனேனி அமரேசுவரி

நீதிபதி கோணமனேனி அமரேசுவரி (Konamaneni Amareswari) (1928-2009) உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.

அமரேசுவரி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள அப்பிகட்லா கிராமத்தில் பிறந்தார்.[1] 1949 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் அரசியல் மற்றும் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார். இவர் 1960-1961 வரை வழக்கறிஞர் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், வழக்குரைஞர் கழகத்திலிருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2] 1975-1976 காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1978ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இறப்பு[தொகு]

இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த இவர், ஜூலை 25, 2009 அன்று புது தில்லியில் இறந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணமனேனி_அமரேசுவரி&oldid=3940273" இலிருந்து மீள்விக்கப்பட்டது