கோக்கண்டன் இரவி
கோக்கண்டன் இரவி என்பவன் கொங்கு நாட்டை அரசாண்ட அரசனாவான். இவன் சேரர் குலம் என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இவர் கள்வர் குலத்தை சேர்ந்தவர்..[1]
இவன் களப்பிரன் என்று கூறும் கருதுகோள்கள்[தொகு]
சி. ஆர். சீனிவாசன் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1970களின் இறுதியில் தாராபுர வட்டம் பொன்னியவாடியில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார்.[2][3] இந்த 2 கல்வெட்டுகளில் முறையே பௌமந் த்யவ்ரத னாகிய கோக்கண்டனிரவி[2][3] என்றும் சந்த்ராதித்ய குலதிலகன் சார்வ பௌமன் கலிநிருப கள்வனா இன கோக்கண்டனிரவி[2][3] என்றும் உள்ளன. இதனால் களப்பிரனென்னும் கலி அரசன் என்று களப்பிரர் பற்றி குறிப்பிடும் வேள்விக்குடி செப்பேட்டுச் செய்திகளின் வடமொழி வடிவமே கலிநிருப கள்வ என்று மாறியிருக்கலாம்.[1] இதைக்கொண்டே இவன் களப்பிர அரசன் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறான்.[1]