கே. ஐ. நாராயணன்
கே. ஐ. நாராயணன் (பிறப்பு: அக்டோபர் 6 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் "மலரும் உள்ளம்" எனும் மாத இதழுக்கு ஆசிரியாராகவும் இருந்துள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1961 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் தொடர்கதைகள் புதுக்கவிதைகள் மற்றும் கட்டுரைகளும் துணுக்குகளும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கே. ஐ. நாராயணன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்