காப்புரிமம்
காப்புரிமம் அல்லது தனியுரிமம் (patent) என்பது இதற்குமுன் பதிவாகாத, அறிவுக் கூர்மையால் இயற்றப்பட்ட, பயன்தரும் ஒரு புத்தம் புதுக்கருத்தைப் படைத்து, அதனைப் பதிவு செய்து, அதனைப் படைத்தவர் மட்டுமே அவர் விரும்புமாறு பயன்படுத்த, அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு நாடு தரும் உரிமை. இதனைப் படைப்பர் தனியுரிமம் என்றோ, படைப்பர் காப்புரிமம் என்றோ, இயற்றுநர் தனியுரிமம் என்றோ, இயற்றுநர் செய்யுரிமம் என்றோ புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் தம்முடைய புதிய கருத்தை பகிர்ந்து கொள்வதால், அதற்கு ஈடு செய்யுமாறு ஒரு நாடு அவருக்கு ஒரு கால இடைவெளிக்கு தனி உரிமம் வழங்குகின்றது. இந்த புதிய கருத்து, செய்முறையில் பயனுடையதாக இருத்தல் வேண்டும், இதற்கு முன் யாரும் செய்திராததாக இருக்க வேண்டும், துறையறிவால் ஒரு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர் எளிதாக அடையக்கூடிய புது மாற்றமாக, புதுமையாக இருக்கக் கூடாது. எனவே புதிய கருத்து என்பது திறமைமிக்க அரும் புத்தாக்கமாக இருத்தல் வேண்டும். இதனால் இவ்வகை புதுக் கருத்தை இயற்றுவோர்களை புத்தியற்றுநர் (புதுமை+இயற்றுநர்) என்பர். ஏற்கனவே உள்ளதை முதன்முறையாகக் கண்டுபிடித்தல் வேறு (எ.கா மறைந்த பழம் நகரத்தைக் கண்டுபிடித்தல், ஓர் ஆறு தொடங்கும் இடத்தைக் கண்டு பிடித்தல், கனிமத்தைக் கண்டு பிடித்தல்), முன்பு இல்லாததை அறிவால் தோற்றுவித்தல் (இயற்றுதல்) வேறு.
[தொகு] வரலாறு
கி.மு. 500 இல், சைபரிஸ் எனும் கிரேக்க நகரில் (இன்றைய தெற்கு இத்தாலி), ஆடம்பரமாக வாழ்வதற்கு யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் அவர்களை ஊக்குவிக்க, அவர்களின் கண்டுபிடிப்பிற்கு ஒரு வருடத்திற்க்கான காப்புரிமமும், அவ்வருடத்தில் அந்தக் கண்டுபிடிப்பினால் ஏற்பட்ட வழங்கி (விரிவாக்கப்பட வேண்டும்)
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- காப்புரிமை - Copyright