கடற்புலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடற்புலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்குகின்றார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்.
பொருளடக்கம் |
கடற்புலிகள் வரலாறு [தொகு]
- ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
- 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
- 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.
- மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.[1]
தாக்குதல் முறை [தொகு]
பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.
படத் தொகுப்பு [தொகு]
இவற்றையும் பார்க்க [தொகு]
- கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு
- விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி
- புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு
- தமிழர் கப்பற்கலை
- இலங்கைக் கடற்படை
கலைச்சொற்கள் [தொகு]
- ஓட்டிகள்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Tamil rebels launch naval attack - (பிபிசி),Tigers attack Sri Lanka Navy installations in Delft - தமிழ்நெட்