எஸ். வி. இரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். வி. இரமணன்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
அறியப்படுவதுதிரைப்பட இசையமைப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்கே. சுப்பிரமணியம்-மீனாட்சி (சிற்றனை எஸ். டி. சுப்புலட்சுமி)
உறவினர்கள்பத்மா சுப்ரமணியம் (சகோதரி)

எஸ். வி. ரமணன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே. சுப்பிரமணியம்-மீனாட்சி தம்பதியரின் மகனும், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் உடன் பிறந்தவரும் ஆவார். இவரது சிற்றனை திரைப்பட நாயகி எஸ். டி. சுப்புலட்சுமி ஆவார். இசையமைப்பாளர் அனிருத் இரமணனின் பேரன் ஆவார்/[1]

மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ். வி. இரமணன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நாடகங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பான விளம்பர படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 1983-ல் ஒய். ஜி. மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான உருவங்கள் மாறலாம் எனும் திரைப்படத்தை இயக்கி, இசை அமைத்துள்ளார். 1966-ல் ஜெயகாந்தன் திரைக்கதை, இயக்கத்தில் வெளியான யாருக்காக அழுதான் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

மறைவு[தொகு]

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில், இரமணன் தமது 87-வது அகவையில் உடல்நலக் குறைவால் மறைந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._இரமணன்&oldid=3589706" இலிருந்து மீள்விக்கப்பட்டது