இளம் ஆய்வறிஞருக்கான வளர்தமிழ் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளம் ஆய்வறிஞருக்கான வளர்தமிழ் விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் எழுதிய மொழி, இலக்கியம், வரலாறு சார்ந்த நூல்களில் சிறந்த நூல் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள்[தொகு]

ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி முனைவர் க. சுந்தரபாண்டியன் அய்யனார் பதிப்பகம்
2013 திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும் முனைவர் க. ஜவஹர்