இரா. சி. ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. சி. ஆறுமுகம் (R. S. Arumugam)(பிறப்பு: மார்ச் 19, 1919) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரையிலும் மீண்டும் 1962 முதல் 1967 வரையிலும் பணியாற்றியுள்ளார். இத்தொகுதியில் இவரோடு எஸ். என். சோமையாஜுலுவும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும் இவர் இரண்டாவது மற்றும் நான்காவது இந்திய நாடாளுமன்ற (தென்காசி) உறுப்பினராக முறையே 1957 முதல் 1962 வரையிலும் 1967 முதல் 1972 வரையிலும் பணியாற்றியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "Shri R.S. Arumugam MP biodata Tenkasi-SC" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சி._ஆறுமுகம்&oldid=3597991" இலிருந்து மீள்விக்கப்பட்டது