இராஜமல்ல தேவராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜமல்ல தேவராயன் கங்க வம்சத்தின் 16வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூற சான்றுகள் இல்லை. இவர் பிரிதிவி கொங்கணி மகாதிராயனின் தம்பி, விசயாதித்தராயனுடைய மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]

தலவனபுரம்[தொகு]

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் பல தேச மன்னர்களை வென்றும், சோழனை வென்று, பின் சமாதானம் செய்து அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]

தத்துபுத்திரன்[தொகு]

பிரிதிவி கொங்கணி மகாதிராயன் தனக்குப் பின் வாரிசு இல்லாததால் தம்பி, விசயாதித்தராயன் முன்னமே இறந்து போனதால் அவனது மகன் இராஜமல்ல தேவராயன் கொங்கு நாடு| கொங்கு தேசத்திற்கு அரசனானான்.[3]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-107)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-107)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜமல்ல_தேவராயன்&oldid=2388537" இலிருந்து மீள்விக்கப்பட்டது