இரண்டாம் பிருத்விராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் பிருத்விராஜன்
சாகம்பரியின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1165-1169 பொ.ச.
முன்னையவர்அமரகங்கேயன்
பின்னையவர்சோமேசுவரர்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

இரண்டாம் பிருத்விராஜன் (Prithviraja II) (ஆட்சி சுமார் 1165-1169 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். இவர் பிருத்வி-பட்டன், பிருத்வி-தேவன் மற்றும் பெத்தாத்-தேவன் உள்ளிட்ட பிற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிருத்விராஜன் சகமான மன்னன் ஜகதேவனின் மகனாவார். ஜகதேவனுக்குப் பின்னர் அவரது சகோதரர் நான்காம் விக்ரகராசனும் பின்னர் விக்ரகராசனின் மகன் அபரகங்கேயனும் ஆட்சிக்கு வந்தனர். தோட் ருத்தி ராணி கோவிலில் கிடைத்த கல்வெட்டின் படி, பிருத்விராஜன் சகம்பரி மன்னனை தோற்கடித்தாக அறிய முடிகிறது. இது பிருத்விராஜன் அபரகங்கேயனை அரியணையில் இருந்து அகற்றி, தான் மன்னரானார் என்பதைக் குறிக்கிறது. [1]

ஆட்சி[தொகு]

இவர் மேற்கில் இருந்து வந்த இசுலாமிய படையெடுப்புகளை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. பொ.ச.1168 தேதியிட்ட ஹான்சி கல்வெட்டின் படி, இவர் தனது தாய்வழி மாமா கில்கணனை அசிகர் கோட்டையின் (நவீன ஹான்சி) பொறுப்பாளராக நியமித்தார். அதை ஹம்மிரா ( அமீர் ) விடம் இருந்து காப்பாற்ற ஆர்வமாக இருந்தார். அந்த நேரத்தில் லாகூரைக் கட்டுப்படுத்திய கசனவித்து மன்னர் குஸ்ரு மாலிக்கை "ஹம்மிரா" என அடையாளம் காணலாம். [2]

கில்கணன் பஞ்சபுரம் என்ற நகரத்தை எரித்ததாகவும் ஹான்சி கல்வெட்டு கூறுகிறது. [2] வரலாற்றாளர் தசரத சர்மா பஞ்சபுரத்தை நவீன பஞ்சூருடன் அடையாளப்படுத்துகிறார். பஞ்சபுரத்தின் ஆட்சியாளர் பிருத்விராஜனின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, விலையுயர்ந்த முத்து மாலையை ஒப்படைத்தார். [3]

பிஜோலியா பாறைக் கல்வெட்டு, பிருத்விராஜா மானசித்திகாரி என்ற யானையை வசந்தபாலன் என்ற ஆட்சியாளரிடம் இருந்து பாதுகாத்ததாகக் கூறுகிறது. தசரத சர்மா இந்த வசந்தபாலனை இலலிதா-விக்ரகராஜா-நாடகா என்ற நாடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசனுடன் அடையாளப்படுத்துகிறார். இந்நாடகத்தின்படி வசந்தபாலன் விக்ரகராஜாவின் காதலி தேசலாதேவியின் தந்தையாவார். அபரகங்கேயன் தேசலாதேவியின் மகன் என்று சர்மா கருதுகிறார். இதனால், வசந்தபாலன் அநேகமாக பிருத்விராஜனின் எதிரியாக இருந்தான், அவனால் அடக்கப்பட்டான். [3]

பிருத்விராஜன் வாரிசு இல்லாமல் இறந்திருக்கலாம். இதன் காரணமாக இவருக்குப் பிறகு இவரது மாமா சோமேசுவரர் பதவியேற்றார். [2]

மதம்[தொகு]

சுகவதேவி [1] அல்லது சுதாவா என்பவர் பிருத்விராஜனின் ராணியாக அறியப்படுகிறார். [3] தம்பதிகள் இருவரும் சைவத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். பிருத்விராஜன் பிராமணர்களுக்கு கிராமங்களையும் விலைமதிப்பற்ற உலோகங்களையும் (தங்கம் உட்பட) பரிசாக வழங்கினார். பிஜோலியாவில் உள்ள பார்சுவநாத சைனக் கோயிலுக்கு மொரஜாரி என்ற கிராமத்தையும் வழங்கினார். [3]

கல்வெட்டுகள்[தொகு]

பிருத்விராஜனின் ஆட்சிக்கால கல்வெட்டுகள் பின்வரும் இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: [4]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 R. B. Singh 1964, ப. 154.
  2. 2.0 2.1 2.2 R. B. Singh 1964, ப. 155.
  3. 3.0 3.1 3.2 3.3 Dasharatha Sharma 1959, ப. 66.
  4. Dasharatha Sharma 1959, ப. 65.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பிருத்விராஜன்&oldid=3448340" இலிருந்து மீள்விக்கப்பட்டது