ஆர். சுப்பண்ணா
ஆர். சுப்பண்ணா | |
---|---|
பிறப்பு | [1] பைராப்புரா, கருநாடகம் | 21 செப்டம்பர் 1911
இறப்பு | 9 ஏப்ரல் 1977 | (அகவை 65)
ஆர். சுப்பண்ணா (R. Subbanna)(21 செப்டம்பர் 1911 - 9 ஏப்ரல் 1977) இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூர் மாநகரத்தின் முதல் மாநகரத் தந்தை ஆவார்.[2]
பெங்களூரு மாநகரத் தந்தை[தொகு]
பெங்களூரில் உள்ள மாநகராட்சி 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதே 1949ஆம் ஆண்டு பெங்களூரின் முதல் மாநகரத் தந்தையாக ஆர். சுப்பண்ணா நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. 1950 இல் முதல் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
பின்னணி[தொகு]
சுப்பண்ணா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தொண்டராக இருந்தார். பெங்களூர் மாநில காங்கிரசில் 30 ஆண்டுகள் பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Subbanna R". பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
- ↑ "Subbanna R". kla.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.