ஆத்திசூடி பழையவுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் பாடிய நீதிநூல்களில் மிகச் சிறிய அளவினைக் கொண்டதாக அமைந்துள்ள ஆத்திசூடி அறிஞர் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தது. இன்று வரையில் பல உரைகள் எழுதப்பட்டுவருகின்றன. அதற்குப் பழங்காலத்திலேயே எழுதப்பட்ட இரண்டு உரைநூல்கள் உள்ளன.

  • இராமானுச கவிராயர் உரை
    • 19-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்காக வரிகூட மாற்றப்பட்டுள்ளது.
    • வு, வூ, வொ, வோ எழுத்துக்கள் தமிழில் மொழிமுதல் எழுத்தாக வருவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு
அம்ம வுத்தமனாய் இரு
அம்ம வூருடன் கூடிவாழ்
அம்ம வொன்னாரைத் தேறேல்
அம்ம வோரம் சொல்லேல்
எனக் கூட்டி எழுதிக் காட்டியுள்ளார்.
  • இராமானுச கவிராயர் உரைக்கு முந்தைய உரை
    • திருக்குறள் மட்டுமன்றி, நாலடியார், புறநானூறு, கம்பராமாயடம், பகவத்கீதை, மாறனலங்காரம் ஆகிய நூல்களிலிருந்தும் தொடர்புடைய மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி_பழையவுரைகள்&oldid=1881274" இலிருந்து மீள்விக்கப்பட்டது