அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி
அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் உள்ள ஒரு பழமையான அருங்காட்சியகம் ஆகும்.
வரலாறு[தொகு]
இந்த அருங்காட்சியகம் 1883 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் காப்பாளர்களில் ஒருவராக இருந்த அருள்தந்தை வின்சட் நியூட்டனின் (1870-1949) நினைவாக அருங்காட்சியகத்துக்கு அவரது பெயர் இடப்பட்டது.
சிறப்புகள்[தொகு]
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காணப்பட்டு தற்போது இங்கு அற்றுவிட்ட கானமயில் இந்த அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.[1] பல பாம்பினங்கள் இங்கு பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நூல்[தொகு]
புனித சூசையப்பர் கல்லூரியின் 175 ஆம் ஆண்டு நிறைவை (2018) ஒட்டி இந்த அருங்காட்சியகம் குறித்த விரிவான தகவல்களைக் கூறும் நூலை தாவரவியலாளர் முனைவர் ஜான்பிரிட்டோ தொகுத்து எழுதி வெளியிட்டார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இயற்கையின் பேழையிலிருந்து! 1: தமிழ்நாட்டின் கடைசி கானமயில்!". 2023-09-16.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "இயற்கையின் பேழையிலிருந்து! 2: பாம்புப் பாதிரியார்". 2023-09-23.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)