அமெரிகோ வெஸ்புச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அமெரிகோ வெஸ்புச்சி | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 9, 1454 புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில் |
| இறப்பு | பெப்ரவரி 22 1512 (அகவை 57) செவில், எசுப்பானியா |
| தேசியம் | இத்தாலியர் |
| பணி | வணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர் |
| அறியப்படுவது | புதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a] |
அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார். இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.