அஞ்சுபுளிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்சுபுளிப்பட்டி

அமைவிடம்

இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி க்கு அருகே அமைந்துள்ளது. இவ்வூரில் நஞ்சையும் புஞ்சையும் நிறைந்து அமையப் பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் கால்நடைகளை சார்ந்தே இம்மக்கள் வாழ்கின்றனர். நஞ்சைய

வரலாறு

இந்த ஊர் மக்கள் வலையப்பட்டி பூர்வீகமாகக் கொண்ட மக்கள் ஆவர். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இம்மக்கள் வேளாண்மை செய்த புன்செய் காடுகளில் குடியேற தொடங்கினர். நாளடைவில் அது ஊராக உருவானது. இவ்வாாறாகவே இந்த ஊர் உருவானது.

பெயர்க்காரணம்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரின் நடுவே ஐந்து புளியமரம் இருந்தது . அந்த இடத்தை அஞ்சுபுளி என்றே இம்மக்கள் அழைத்தனர். இதுவே நாளடைவில் மருவி அஞ்சுபுளிப்பட்டி என்று உருவானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சுபுளிப்பட்டி&oldid=3535846" இலிருந்து மீள்விக்கப்பட்டது