பேச்சு:செர்லக் ஓம்சு
தான் ஏன் தேவையற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்லை என்பதற்கு ஓம்சு சொல்லும் காரணம் நகைச்சுவையான ஒன்று. 'மூளை என்பது ஒரு மூடிய அறை போல. அதிகமாகப் பொருட்கள் சேர்ந்து விட்டால் ஒன்றை எடுத்தால் தான் இன்னொன்றை வைக்க முடியும்.”
ஆனால் நவீன கால நரம்பியல் அறிவியலோ மனித நினைவுத்திறனின் ஆற்றல் அளப்பரியது என்றும் எவ்வளவுக்கெவ்வளவு நாம் பலப்பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 05:35, 24 சூன் 2011 (UTC)
- ஓம்சு ஒரு சுய முரண் ஆசாமி. அப்படியே உல்டாவாக சொல்வதும் உண்டு :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:44, 24 சூன் 2011 (UTC)
தமிழில் வந்த மொழிபெயர்ப்புகள்[தொகு]
கிழக்கு பதிப்பக வெளியீடாக பத்ரி சேஷாத்ரி இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். வேறு ஏதேனும் மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா பாலா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:43, 24 சூன் 2011 (UTC)
- நிறைய வந்துள்ளன. நூலகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் விவரங்கள் தெரியவில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 03:53, 25 சூன் 2011 (UTC)