வல்லவன் (இசைத் தொகுப்பு)
Appearance
வல்லவன் என்பது யோகி பி உடன் நட்சத்ரா இசைக்குழு 2008 இல் வெளியிட்ட ஒரு தமிழ் சொல்லிசை இசைத் தொகுப்பு ஆகும். இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற மடை திறந்து என்ற பாடல் தமிழ் சொல்லிசைக்கு ஒரு முன்னோடிப் பாடலாகப் பலரால் கருதப்படுகிறது. இந்த இசைத் தொகுப்பு மலேசியா, இந்தியா உட்பட பல நாடுகளில் பரந்த வரவேற்பைப் பெற்றது.