பதிபசுபாசத் தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிபசுபாசத் தொகை [1] என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 25 குறட்பாக்களைக் கொண்டது. இந்த மறைஞான சம்பந்தர் பதிபசுபாசப் பனுவல் என்னும் நூல் 337 குறட்பாக்களில் இயற்றியுள்ளார். பதிபசுபாசத் தொகை என்னும் இந்த நூல் பதிபசுப்பாசப் பனுவல் நூலின் தொகுப்பாக அவராலேயே எழுதப்பட்ட வேறொரு சிறு தொகுப்பு நூல்.

இந்த நூல் காப்பு, சிவசத்தி, நந்தி முதலானோர் வணக்கத்துடன் தொடங்குகிறது. பதி, பசு, பாசம், அனுக்கிரகம், பலன் எட்டும் ஐந்து இயல்களைக் கொண்டது.

அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 182. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிபசுபாசத்_தொகை&oldid=1911531" இலிருந்து மீள்விக்கப்பட்டது