தவறின்றித் தமிழ் எழுதுவோம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவறின்றித் தமிழ் எழுதுவோம்
நூல் பெயர்:தவறின்றித் தமிழ் எழுதுவோம்
ஆசிரியர்(கள்):மா. நன்னன்
வகை:மொழி
துறை:இலக்கணம்
இடம்:சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:112
பதிப்பகர்:ஏகம் பதிப்பகம்
பதிப்பு:2006
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

தவறின்றித் தமிழ் எழுதுவோம், மா. நன்னன் எழுதிய நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூல் உள்ளுறை, நான்காம் பதிப்பின் முகவுரை, முன்னுரை உள்ளிட்ட 55 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. வழுக்குத்தமிழ்[கு 1] ஓய்வும் ஒழிவும், இறும்பூது, குறிப்பாக, எல்லாரும், அனுப்புக, சிக்கனம், கஞ்சத்தனம் உள்ளிட்ட பல சொற்களின் பயன்பாடு குறித்து உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தவறின்றித் தமிழ் எழுத பயனுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. யாரேனும் ஒருவர் ஒரு சொல்லையோ தொடரையோ எக்காரணத்தாலாவது தவறாகப் பயன்படுத்திவிட்டால், பின்னர் பலரும் அத்தகைய தவறுகளைத் தொடர்வது மரபாகிவிட்டது என்றும், அத் தவறான தமிழுக்குத்தான் வழுக்குத் தமிழ் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆசிரியர் கூறுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Marina Books[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணை[தொகு]

'தவறின்றித் தமிழ் எழுதுவோம்', நூல், (2006, ஆறாம் பதிப்பு; ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ஆம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை)