சிவபூசை அகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவபூசை அகவல் என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
திருவாரூரில் வாழ்ந்த உலகநாதன் என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இது இயற்றப்பட்டது என இந்த நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

  • இந்த நூல் 444 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.
  • சிவாகமங்களைத் தொகுத்து தமிழர்களுக்காகச் செய்யப்பட்ட நூல்.
  • சூரிய பூசை, சிவ பூசை, சண்டேசுர பூசை என்ற வரிசையில் பூசை செய்யும் முறைகளைக் கூறுகிறது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபூசை_அகவல்&oldid=1121186" இலிருந்து மீள்விக்கப்பட்டது