கிளர்ச்சி
கிளர்ச்சி (எழுச்சி அல்லது போராட்டம் அல்லது கலகம்) என்பது கட்டளைக்கெதிரான கீழ்படிவின்மை அல்லது புறக்கணிப்பாகும்.[1] ஆகவே, இது அரசாங்கம் அல்லது அரச தலைமை அதிகாரத்தினை அழிக்கும் அல்லது மாற்றும் நோக்கத்துடன் சூழப்பட்ட நடத்தைகளின் பரப்பாகும். இது ஒருவிதத்தில் சட்ட மறுப்பு, மக்கள் கீழ்ப்படியாமை, வன்முறையற்ற எதிர்ப்பு ஆகிய நிகழ்வுகளாக வன்முறையற்ற நடத்தைகளின் வடிவமாக காணப்படும். இது மறுவிதத்தில் வன்முறை ஈடுபாடாகவும் காணப்படும். கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக அவர்கள் ஆயுதம் தரித்திருந்தால் "கிளர்ச்சியாளர்" அல்லது "போராட்டக்காரர்" அல்லது "கலகக்காரர்" என அழைக்கப்படுவர்.