பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7: வரிசை 7:
== தொழில் வாழ்க்கை ==
== தொழில் வாழ்க்கை ==
1927 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சியில் பக்கவாத்தியம் வாசித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய 'ரிஷிவாலி' பள்ளியில் 1979 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தார்.
1927 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சியில் பக்கவாத்தியம் வாசித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய 'ரிஷிவாலி' பள்ளியில் 1979 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தார்.

'''இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:''' <br>
பாலக்காடு ஆர். ரகு <br>
பாலக்காடு சுரேஷ் <br>
[[உமையாள்புரம் சிவராமன்|உமையாள்புரம் கே. சிவராமன்]]


== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==

17:37, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் (1912 - 1981) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பழைய கல்பதி கிராமத்தில் இவர் பிறந்தார். பெற்றோர்: சேஷம் பாகவதர் - ஆனந்தம்மா. தனது மிருதங்க இசைப் பயிற்சியை சுப்பய்யரிடம் பெற ஆரம்பித்தார். 10 வயது நிரம்பியபோது தன் அப்பாவுக்கும், மற்ற கதாகாலக்ஷேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.

தொழில் வாழ்க்கை

1927 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சியில் பக்கவாத்தியம் வாசித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய 'ரிஷிவாலி' பள்ளியில் 1979 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தார்.

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
பாலக்காடு ஆர். ரகு
பாலக்காடு சுரேஷ்
உமையாள்புரம் கே. சிவராமன்

சிறப்புகள்

சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு.

விருதுகள்

  • ஜனாதிபதி விருது, 1956
  • சங்கீத கலாநிதி விருது, 1966; வழங்கியது: மியூசிக் அகாடமி, சென்னை
  • பத்ம பூஷன் விருது, 1971

உசாத்துணை

பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010