தமிழ் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி தமிழ்ப் படம், தமிழ்ப் படம் (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பொது வழக்கிலி... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
18:49, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
தமிழ்ப் படம் | |
---|---|
இயக்கம் | C. S. Amudhan |
தயாரிப்பு | Dhayanidhi Alagiri |
கதை | C. S. Amudhan Chandru |
இசை | Kannan |
நடிப்பு | Shiva Disha Pandey |
ஒளிப்பதிவு | Nirav Shah |
படத்தொகுப்பு | T. S. Suresh |
கலையகம் | Cloud Nine Movies |
விநியோகம் | Y NOT Studios |
வெளியீடு | 29 January 2010 |
ஓட்டம் | 160 min. |
நாடு | இந்தியா |
மொழி | Tamil |
ஆக்கச்செலவு | $1 million |
மொத்த வருவாய் | $3 million |
தமிழ்ப் படம், தயாநிதி அழகிரியின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஆகும். சி. எஸ். அமுதன் இயக்கியுள்ள இப் படத்தில் சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்துள்ளனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கருத்தம்மாவிலிருந்து தளபதி, சின்னத்தம்பி, அபூர்வ சகோதரர்கள், என் ராசாவின் மனசிலே, மொழி என்று எந்தப் படத்தையும் வம்புக்கிழுக்கத் தயங்கவே இல்லை. ஆனால் வழக்கம் போல இல்லாமல் தலை கீழாக. கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால் ஒரு குறிப்பிட்ட மேனரிசத்தைக் காட்டி, அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். அதே ‘கருத்தம்மா’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்(?)படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது மார்க்கட்டில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கோட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”