சென்னை சங்கமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
இவ்வாறு பொங்கல் திருவிழாவினையொட்டி ஓர் கலைவிழா மூலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பண்பாடு மற்றும் பழங்கலைகளை வெளியுலகினிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் எண்ணம் [[மாநிலங்களவை]] உறுப்பினரும் தமிழ்நாடு முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் மகளுமான [[கனிமொழி]] மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் [[செகத் காசுபர் ராசு]] ஆகியோருக்கு செப்டம்பர் 2006இல் தோன்றியது.<ref>http://www.chennaisangamam.com/Story.html/ Chennai Sangamam history</ref>. அந்த எண்ணத்தின் செயற்பாடாக தமிழக அரசின் புரவணைப்பில் 2007ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.
இவ்வாறு பொங்கல் திருவிழாவினையொட்டி ஓர் கலைவிழா மூலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பண்பாடு மற்றும் பழங்கலைகளை வெளியுலகினிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் எண்ணம் [[மாநிலங்களவை]] உறுப்பினரும் தமிழ்நாடு முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் மகளுமான [[கனிமொழி]] மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் [[செகத் காசுபர் ராசு]] ஆகியோருக்கு செப்டம்பர் 2006இல் தோன்றியது.<ref>http://www.chennaisangamam.com/Story.html/ Chennai Sangamam history</ref>. அந்த எண்ணத்தின் செயற்பாடாக தமிழக அரசின் புரவணைப்பில் 2007ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.


இதன் நான்காவது நிகழ்வு 2010ஆம் ஆண்டு சனவரி 10 முதல் சனவரி 16 வரை நடைபெறும்.
இதன் நான்காவது நிகழ்வு 2010ஆம் ஆண்டு சனவரி 10 முதல் சனவரி 16 வரை நடைபெற்றது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஐந்தாவது தொகுப்பு சனவரி 12 முதல் நடைபெறும்.


==விழா விவரணம்==
==விழா விவரணம்==

11:10, 3 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சென்னை சங்கமம் நிகழ்வில் கூத்து

சென்னை சங்கமம் சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் மிகப்பெரும் திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சியாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகிறது. [1]. தமிழரின் அறுவடை திருவிழா மற்றும் புத்தாண்டான பொங்கல் திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது. இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே இந்தியாவில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.[2].

வரலாறு

இவ்வாறு பொங்கல் திருவிழாவினையொட்டி ஓர் கலைவிழா மூலம் தமிழ்நாட்டு பண்பாடு மற்றும் பழங்கலைகளை வெளியுலகினிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் எண்ணம் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் செகத் காசுபர் ராசு ஆகியோருக்கு செப்டம்பர் 2006இல் தோன்றியது.[3]. அந்த எண்ணத்தின் செயற்பாடாக தமிழக அரசின் புரவணைப்பில் 2007ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.

இதன் நான்காவது நிகழ்வு 2010ஆம் ஆண்டு சனவரி 10 முதல் சனவரி 16 வரை நடைபெற்றது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஐந்தாவது தொகுப்பு சனவரி 12 முதல் நடைபெறும்.

விழா விவரணம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் - கடற்கரை,பூங்காக்கள், மாநகராட்சி மைதானங்கள்,கல்லூரி/பள்ளி மைதானங்கள்,வணிக வளாகங்கள் - கலைஞர்கள் தங்கள் நாட்டுக் கலைத்திறன்களை வெளிப்படுத்துவர். இவ்வாறு பொதுவிடங்களில் நடத்தும் எண்ணம் பெங்களூரு ஹப்பா கொண்டாட்டங்களைக் கண்டு எழுந்தது. [4]. இவ்விழாவில் நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள், தற்காப்பு கலைகள், கூத்து என தமிழர் கலைகள் இடம்பெறுவதோடு 2008ஆம் ஆண்டின் இரண்டாவது நிகழ்விலிருந்து தமிழ்நாட்டு பல்வகை உணவு முறைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. 4000 கலைநிகழ்ச்சிகள் நடக்கும் இவ்விழாவில் ஆண்டுதோறும் 2000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.[5].

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_சங்கமம்&oldid=659082" இலிருந்து மீள்விக்கப்பட்டது