இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:Հենրի VIII
வரிசை 73: வரிசை 73:
[[hr:Henrik VIII., kralj Engleske]]
[[hr:Henrik VIII., kralj Engleske]]
[[hu:VIII. Henrik angol király]]
[[hu:VIII. Henrik angol király]]
[[hy:Հենրի VIII]]
[[id:Henry VIII dari Inggris]]
[[id:Henry VIII dari Inggris]]
[[io:Henrik 8ma di Anglia]]
[[io:Henrik 8ma di Anglia]]

09:51, 23 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

எட்டாம் ஹென்றி
Henry VIII
இங்கிலாந்தின் அரசன்
ஆட்சிக்காலம்21 ஏப்ரல் 1509 – 28 சனவரி 1547 (37 ஆண்டுகள், 282 நாட்கள்)
முடிசூட்டுதல்24 சூன் 1509 (அகவை 17)
முன்னையவர்ஹென்றி VII
பின்னையவர்எட்வர்ட் VI
வாழ்க்கைத் துணைகள்அராகனின் கத்தரீன்
ஆன் பொலெயின்
ஜேன் சீமோர்
கிளீவ்சின் ஆன்
கத்தரீன் ஹவார்ட்
கத்தரீன் பார்
குழந்தைகளின்
பெயர்கள்
மேரி I
ஹென்றி ஃபிட்ஸ்ரோய்
எலிசபெத் I
எட்வர்ட் VI
தந்தைஹென்றி VII
தாய்யோர்க்கின் எலிசபெத்
மதம்கிறித்தவம் (ஆங்கிலிக்கன்,
முன்னர் ரோமன் கத்தோலிக்கம்)
கையொப்பம்எட்டாம் ஹென்றி Henry VIII's signature

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (Henry VIII ஜூன் 28, 1491ஜனவரி 28, 1547), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர்.

ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்

ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை உரோமன் காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிறித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார்.போப்பாண்டவர் மேற்பார்வையில் அதுவரை இயங்கிய இங்கிலாந்து திருச்சபையை ஹென்றி தன் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைமையில் அமர்த்தினார்.அஃதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க சந்நியாச மடங்களை அவர் அடியோடு ஓழித்தார்.மேலும் அவர் தேவாலய வழிப்பாடு முறைகளை தமது இஷ்டம் போல் மாற்றி அமைத்தார்.இவை யாவும் செய்தும் அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது ஆச்சரியம்; காத்தோலிக மதத்திற்கு எதிராக பேசிய அத்தனைப் பேரையும் தீயில் இட்டு கொன்றார் என்பது அதைவிட பெரிய ஆச்சரியம்!

எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.

தனது அகம்பாவத்திற்காக மட்டுமின்றி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆறுமுறை மணந்துகொண்டார். தனது நாட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணுக்கு போதிய வலிமை இல்லை என்று உறுதியாக் நம்பினார். ஆறு திருமணங்கள் புரிந்த சாதனையோடு அவர் புரடஸ்தந்தம்(ஆங்கிலம்: )இங்கிலாந்து தேசிய மதமாகுவதற்கு மறைமுகக் காரணமாகவும் இருந்ததால் அவர் இன்றும் ஆங்கில் உலகத்தில் பேசப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் பார்ப்போருக்கு அறுவறுப்பை அள்ளி வீசும் அளவிற்கு பருமனாக வளர்ந்தார்; பல்வேறு நோய்கள் சங்கமிக்கும் கூடாரமாக விளங்கினார். ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி தூற்றினர்.

ஆறு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்துகொள்வது, அவர்களில் இரண்டு பேரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுப்பது, ஆகிய அவரது செயல்களை ஒட்டி பல புதின புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன.இவற்றில் மூலம் எட்டாம் ஹென்றி இன்றும் சாதாரண ஆங்கிலேய மக்களிடையே ஒரு பிரபல வரலாற்று நபராகப் பேசப்படுகிறார்.

இளமைப் பருவம்: 1491–1509

க்ரீன்விச் அரண்மனையில் ஏழாம் ஹென்றிக்கும் யோர்க் கோமகள் எலிஸபெத்துக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவரோடு பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்று மட்டுமே குழ்ந்தை பருவத்தைத் தாண்டி வாழ்ந்தன. வாழ்ந்தவை: வேல்ஸ் யுவராஜன் ஆர்த்தர், மார்கரெட், மேரி ஆகியோர். மடிந்தவை: எலிஸபெத், எட்மன், கெத்தரின் ஆகியோர்.

1493 ஆம் ஆண்டில், இரண்டு வயதிலே இவருக்கு டோவர் கோட்டையின் தலைவர் பதவியும் சிங்க் துறைமுகத்தின் பாதுகாவல நாயகராக( Lord Warden of the Cinque Ports) பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.1494 ஆம் ஆண்டில் மூன்று வயதான இவர் இயோர்க் கோமானாக ( Duke of York) அமர்த்தப்பட்டார்.அதன் பின்பு இங்கிலாந்தின் காவலர்க்கோமானாகவும் அயர்லாந்தின் துணை முதல்வராகவும் இருந்தார்.இவருக்கு பல தரமான ஆசிரியர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஸ்பேனிஷ் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்து இவரை அம்மொழிகளை நன்கு பேசவும் படிக்கவும் வைத்தனர்.அவரது அண்ணன் ஆர்த்தர் மன்னர் ஆவர் என்று அனைவரும் எதிர்பார்த்ததால் ஹென்றி இங்கிலாந்தின் உரோமன் காத்தோலிக்க திருச்சபை பீடத்தின் தலைமை பொறுப்பை வகிப்பார் என்று அவரது தந்தையார் திட்டமிட்டார்.பிற்காலத்தில் ஹென்றி நாட்டுக்கு மன்னராகி அதே திருச்சபையை பாப்பரசரின் கட்டுப்பாட்டிலிருந்து ( அதாவது திருப்பீடத்திலிருந்து(English: The Holy See )) வெளியேற்றி ஹென்றியின் தலைமைக்கீழ் ஒரு தனீ காத்தோலிக்க திருச்சபையை உருவாக்குவார் என்று யாருக்குத்தான் அன்று தெரிந்தது!