எண்
|
பாசுரம்
|
திவ்ய பிரபந்தம் எண்
|
1
|
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள்,
- ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்தனங்க தேவா,
- உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியையும் தொழுதேன்,
- வெய்யதோர் தழலுமிழ் சக்கரக் கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே.
|
504
|
2
|
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
- வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
- முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
- கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
- இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே.
|
505
|
3
|
மத்தநன் னறுமலர் முருக்கமலர்
- கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி, தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
- வாசகத் தழித்துன்னை வைதிடாமே, கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
- கோவிந்த னென்பதோர் பேரேழுதி, வித்தகன் வேங்கட வாணனென்னும்
- விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
|
506
|
4
|
சுவரில் புராணநின் பேரேழுதிச்
- சுறவநற் கொடிகளும் துரங்கங்களும், கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
- காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா, அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
- ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள், துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
- தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே.
|
507
|
5
|
வானிடை வாழுமவ் வானவர்க்கு
- மறையவர் வேள்வியில் வகுத்தஅவி, கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
- கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
- உன்னித் தெழுந்தவென் தடமுலைகள், மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
- வாழகில் லேன்கண்டாய் மன்மதனே.
|
508
|
6
|
உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
- ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல் தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
- திருந்தவே நோற்கின்றேன் காமதேவா, கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
- கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத் திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
- திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய்.
|
509
|
7
|
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
- கட்டி யரிசி யவலமைத்து, வாயுடை மறையவர் மந்திரத்தால்
- மன்மத னே.உன்னை வணங்குகின்றேன், தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
- திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம், சாயுடை வயிறுமென் தடமுலையும்
- தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே.
|
510
|
8
|
மாசுடை யுடம்பொடு தலையுலறி
- வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு, தேசுடை திறலுடைக் காமதேவா.
- நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய், பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
- பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
- என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்.
|
511
|
9
|
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
- தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன், பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
- பணிசெய்து வாழப் பெறாவிடில்நான், அழுதழு தலமந்தம் மாவழங்க
- ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
- ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே.
|
512
|
10
|
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
- கழலிணை பணிந்தங்கோர் கரியலற, மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
- மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று, பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
- புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
- விண்ணவர் கோனடி நண்ணுவரே.
|
513
|
11
|
நாமமாயிர மேத்தநின்ற
- நாராயணாநர னே,உன்னை மாமிதன்மக னாகப்பெற்றா
- லெமக்குவாதை தவிருமே, காமன்போதரு காலமென்றுபங்
- குனிநாள்கடை பாரித்தோம், தீமைசெய்யும் சிரீதரா.எங்கள்
- சிற்றில்வந்து சிதையேலே.
|
514
|
12
|
இன்றுமுற்றும் முதுகுநோவ
- இருந்திழைத்தஇச் சிற்றிலை, நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
- ஆர்வந்தன்னைத் தணிகிடாய், அன்றுபாலக னாகியாலிலை
- மேல்துயின்றவெம் மாதியாய், என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
- கம்மெழாததெம் பாவமே.
|
515
|
13
|
குண்டுநீருறை கோளரீ.மத
- யானைகோள்விடுத் தாய்,உன்னைக் கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
- கண்களாலிட்டு வாதியேல், வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
- கைகளால்சிர மப்பட்டோ ம், தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள்
- சிற்றில்வந்து சிதையேலே.
|
516
|
14
|
பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன்,
- பேச்சும்செய்கையும், எங்களை மையலேற்றி மயக்கவுன்முகம்
- மாயமந்திரந் தான்கொலோ, நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
- நோவநாங்களு ரைக்கிலோம், செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
- சிற்றில்வந்து சிதையேலே.
|
517
|
15
|
வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
- விசித்திரப்பட, வீதிவாய்த் தெள்ளிநாங்களி ழைத்தகோல
- மழித்தியாகிலும், உன்றன்மேல் உள்ளமோடி யுருகலல்லால்
- உரோடமொன்று மிலோங்கண்டாய், கள்ளமாதவா.கேசவா.உன்
- முகத்தனகண்க ளல்லவே.
|
518
|
16
|
முற்றிலாதபிள் ளைகளோம்முலை
- போந்திலாதோமை, நாடொறும் சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி
- துண்டுதிண்ணென நாமது கற்றிலோம்,கட லையடைத்தரக்-
- கர்குலங்களை முற்றவும் செற்று,இலங்கையைப் பூசலாக்கிய
- சேவகா.எம்மை வாதியேல்.
|
519
|
17
|
பேதநன்கறி வார்களோடிவை
- பேசினால்பெரி திஞ்சுவை, யாதுமொன்றறி யாதபிள்ளைக
- ளோமைநீநலிந் தென்பயன், ஓதமாகடல் வண்ணா.உன்மண
- வாட்டிமாரொடு சூழறும், சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
- சிற்றில்வந்து சிதையேலே.
|
520
|
18
|
வட்டவாய்ச்சிறு தூதையோடு
- சிறுசுளகும்மண லுங்கொண்டு, இட்டமாவிளை யாடுவோங்களைச்
- சிற்றிலீடழித் தென்பயன், தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச்
- சக்கரம்கையி லேந்தினாய், கட்டியும்கைத் தாலின்னாமை
- அறிதியேகடல் வண்ணனே.
|
521
|
19
|
முற்றத்தூடு புகுந்துநின்முகங்
- காட்டிப்புன்முறு வல்செய்து, சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
- கக்கடவையோ கோவிந்தா, முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
- நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்- பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
- பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்?
|
522
|
20
|
சீதைவாயமு தமுண்டாய்.எங்கள்
- சிற்றில்நீசிதை யேல்.என்று, வீதிவாய்விளை யாடுமாயர்
- சிறுமியர்மழ லைச்சொல்லை, வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி
- புத்தூர்மன்விட்டு சித்தன்றன், கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை
- வின்றிவைகுந்தம் சேர்வரே.
|
523
|
21
|
கோழி யழைப்பதன் முன்னம்
- குடைந்துநீ ராடுவான் போந்தோம், ஆழியஞ் செல்வ னெழுந்தான்
- அரவணை மேல்பள்ளி கொண்டாய், ஏழைமை யாற்றவும் பட்டோ ம்
- இனியென்றும் பொய்கைக்கு வாரோம், தோழியும் நானும் தொழுதோம்
- துகிலைப் பணித்தரு ளாயே.
|
524
|
22
|
இதுவென் புகுந்ததிங் கந்தோ.
- இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய், மதுவின் துழாய்முடி மாலே.
- மாயனே.எங்க ளமுதே, விதியின்மை யாலது மாட்டோ ம்
- வித்தகப் பிள்ளாய். விரையேல், குதிகொண் டரவில் நடித்தாய்.
- குருந்திடைக் கூறை பணியாய்.
|
525
|
23
|
எல்லே யீதென்ன இளமை
- எம்மனை மார்காணி லொட்டார், பொல்லாங்கீ தென்று கருதாய்
- பூங்குருந் தேறி யிருத்தி, வில்லாலி லங்கை யழித்தாய்.நீ
- வேண்டிய தெல்லாம் தருவோம், பல்லாரும் காணாமே போவோம்
- பட்டைப் பணித்தரு ளாயே.
|
526
|
24
|
பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
- பலர்குடைந் தாடும் சுனையில், அரக்கநில் லாகண்ண நீர்கள்
- அலமரு கின்றவா பாராய், இரக்கமே லொன்று மிலாதாய்.
- இலங்கை யழித்த பிரானே, குரக்கர சாவ தறிந்தோம்
- குருந்திடைக் கூறை பணியாய்.
|
527
|
25
|
காலைக் கதுவிடு கின்ற
- கயலோடு வாளை விரவி, வேலைப் பிடித்தெந்னை மார்கள்
- ஓட்டிலென் னவிளை யாட்டோ , கோலச்சிற் றாடை பலவுங்
- கொண்டுநீ யேறி யிராதே, கோலங் கரிய பிரானே.
- குருந்திடைக் கூறை பணியாய்.
|
528
|
26
|
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
- தாள்களெங் காலைக் கதுவ, விடத்தே ளெறிந்தாலே போல
- வேதனை யற்றவும் பட்டோ ம் குடத்தை யெடுத்தேற விட்டுக்
- கூத்தாட வல்லஎங் கோவே, படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள்
- பட்டைப் பணித்தரு ளாயே.
|
529
|
27
|
நீரிலே நின்றயர்க் கின்றோம்
- நீதியல் லாதன செய்தாய், ஊரகம் சாலவும் சேய்த்தால்
- ஊழியெல் லாமுணர் வானே, ஆர்வ முனக்கே யுடையோம்
- அம்மனை மார்காணி லொட்டார், போர விடாயெங்கள் பட்டைப்
- பூங்குருந் தேறியி ராதே.
|
530
|
28
|
மாமிமார் மக்களே யல்லோம்
- மற்றுமிங் கெல்லாரும் போந்தார், தூமலர்க் கண்கள் வளரத்
- தொல்லையி ராத்துயில் வானே, சேமமே லன்றிது சாலச்
- சிக்கென நாமிது சொன்னோம், கோமள ஆயர்கொ ழுந்தே.
- குருந்திடைக் கூறை பணியாய்.
|
531
|
29
|
கஞ்சன் வலைவைத்த வன்று
- காரிரு ளெல்லில் பிழைத்து, நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
- நின்றஇக் கன்னிய ரோமை, அஞ்ச உரப்பாள் அசோதை
- ஆணாட விட்டிட் டிருக்கும், வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
- மசிமையி லீ.கூறை தாராய்.
|
532
|
30
|
கன்னிய ரோடெங்கள் நம்பி
- கரிய பிரான்விளை யாட்டை, பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
- புதுவையர் கோன்பட்டன் கோதை, இன்னிசை யால்சொன்ன மாலை
- ஈரைந்தும் வல்லவர் தாம்போய், மன்னிய மாதவ னோடு
- வைகுந்தம் புக்கிருப் பாரே.
|
533
|
31
|
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே.
|
534
|
32
|
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே.
|
535
|
33
|
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே.
|
536
|
34
|
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,
வாய்த்த காளியன் மேல்நட மாடிய,
கூத்த னார்வரில் கூடிடு கூடலே.
|
537
|
35
|
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,
ஓடை மாமத யானை யுதைத்தவன்,
கூடு மாகில்நீ கூடிடு கூடலே.
|
538
|
36
|
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே.
|
539
|
37
|
அன்றின் னாதன செய்சிசு பாலனும்,
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே.
|
540
|
38
|
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,
கோவ லன்வரில் கூடிடு கூடலே.
|
541
|
39
|
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்,
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே.
|
542
|
40
|
பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்த,எம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே.
|
543
|
41
|
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே.
|
544
|
42
|
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
- வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை, உகந்தது காரண மாகஎன்
- சங்கிழக் கும்வழக் குண்டே, புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
- பொதும்பினில் வாழும் குயிலே, பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
- பவளவா யன்வரக் கூவாய்.
|
545
|
43
|
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட
- விமல னெனக்குருக் காட்டான், உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
- உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
- களித்திசை பாடுங் குயிலே, மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
- வேங்கட வன்வரக் கூவாய்.
|
546
|
44
|
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
- இராவணன் மேல்,சர மாரி தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
- தலைவன் வரவெங்குங் காணேன், போதலர் காவில் புதுமணம் நாறப்
- பொறிவண்டின் காமரங் கேட்டு,உன் காதலி யோடுடன் வாழ்குயி லே.என்
- கருமாணிக் கம்வரக் கூவாய்.
|
547
|
45
|
என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
- இமைபொருந் தாபல நாளும், துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
- தோணி பெறாதுழல் கின்றேன், அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
- நீயு மறிதி குயிலே, பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
- புண்ணிய னைவரக் கூவாய்.
|
548
|
46
|
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
- வில்லிபுத் தூருறை வான்றன், பொன்னடி காண்பதோ ராசயி னாலென்
- பொருகயற் கண்ணிணை துஞ்சா, இன்னடி சிலோடு பாலமு தூட்டி
- எடுத்தவென் கோலக் கிளியை, உன்னொடு தோழமை கொள்வன் குயிலே.
- உலகளந் தான்வரக் கூவாய்.
|
549
|
47
|
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
- இருடீகே சன்வலி செய்ய, முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
- முலயு மழகழிந் தேன்நான், கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
- கொள்ளு மிளங்குயி லே,என் தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
- தலையல்லால் கைம்மாறி லேனே.
|
550
|
48
|
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
- புணர்வதோ ராசயி னால்,என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
- தாவியை யாகுலஞ் செய்யும், அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு
- ஆழியும் சங்குமொண் தண்டும், தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,
- சாலத் தருமம் பெறுதி.
|
551
|
49
|
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
- சதுரன் பொருத்த முடையன், நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
- நானு மவனு மறிதும், தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
- சிறுகுயி லே,திரு மாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
- அவனைநான் செய்வன காணே.
|
552
|
50
|
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
- பாசத் தகப்பட்டி ருந்தேன், பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
- லே.குறிக் கொண்டிது நீகேள், சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
- பொன்வளை கொண்டு தருதல், இங்குள்ள காவினில் வாழக் கருதில்
- இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.
|
553
|
51
|
அன்றுல கம்மளந் தானை யுகந்தடி-
- மைக்கண வன்வலி செய்ய, தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
- நலியும் முறைமை யறியேன், என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
- தகர்த்தாதே நீயும் குயிலே, இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
- இங்குத்தை நின்றும் துரப்பன்.
|
554
|
52
|
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
- வேற்கண் மடந்தை விரும்பி, கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு
- கருங்குயி லே.என்ற மாற்றம், பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
- பட்டர்பி ரான்கோதை சொன்ன, நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-
- நாராய ணாயவென் பாரே.
|
555
|
53
|
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
|
556
|
54
|
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.
|
557
|
55
|
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
|
558
|
56
|
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
|
559
|
57
|
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
|
560
|
58
|
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
|
561
|
59
|
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.
|
562
|
60
|
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.
|
563
|
61
|
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
|
564
|
62
|
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
|
565
|
63
|
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
|
566
|
64
|
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
|
567
|
65
|
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.
|
568
|
66
|
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ.
|
569
|
67
|
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே.
|
570
|
68
|
உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே.
|
571
|
69
|
போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.
|
572
|
70
|
செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே.
|
573
|
71
|
உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.
|
574
|
72
|
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.
|
575
|
73
|
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே.
|
576
|
74
|
விண்ணீல மேலாப்பு
- விரித்தாற்போல் மேகங்காள், தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
- திருமாலும் போந்தானே, கண்ணீர்கள் முலைக்குவட்டில்
- துளிசோரச் சோர்வேனை, பெண்ணீர்மை யீடழிக்கும்
- இதுதமக்கோர் பெருமையே?
|
577
|
75
|
மாமுத்த நிதிசொரியும்
- மாமுகில்காள், வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட
- தாடாளன் வார்த்தையென்னே, காமத்தீ யுள்புகுந்து
- கதுவப்பட்டு இடைக்கங்குல், ஏமத்தோர் தென்றலுக்கிங்-
- கிலக்காய்நா னிருப்பேனே.
|
578
|
76
|
ஒளிவண்ணம் வளைசிந்தை
- உறக்கத்தோ டிவையெல்லாம், எளிமையா லிட்டென்னை
- ஈடழியப் போயினவால், குளிரருவி வேங்கடத்தென்
- கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்.
- ஆவிகாத் திருப்பேனே.
|
579
|
77
|
மின்னாகத் தெழுகின்ற
- மேகங்காள், வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை
- தங்கியசீர் மார்வற்கு, என்னாகத் திளங்கொங்கை
- விரும்பித்தாம் நாடோ றும், பொன்னாகம் புல்குதற்கென்
- புரிவுடைமை செப்புமி
|
580
|
78
|
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
- மாமுகில்காள், வேங்கடத்துத் தேன்கொண்ட மலர்ச்சிதறத்
- திரண்டேறிப் பொழிவீர்காள், ஊன்கொண்ட வள்ளுகிரால்
- இரணியனை யுடலிடந்தான், தான்கொண்ட சரிவளைகள்
- தருமாகில் சாற்றுமினே.
|
581
|
79
|
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
- தண்முகில்காள், மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே
- நிரந்தேறிப் பொழிவீர்காள், உலங்குண்ட விளங்கனிபோல்
- உள்மெலியப் புகுந்து,என்னை நலங்கொண்ட நாரணற்கென்
- நடலைநோய் செப்புமினே.
|
582
|
80
|
சங்கமா கடல்கடைந்தான்
- தண்முகில்காள், வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ்
- அடிவீழ்ச்சி விண்ணப்பம், கொங்கைமேல் குங்குமத்தின்
- குழம்பழியப் புகுந்து,ஒருநாள் தங்குமே லென்னாவி
- தங்குமென் றுரயீரே.
|
583
|
81
|
கார்காலத் தெழுகின்ற
- கார்முகில்காள், வேங்கடத்துப் போர்காலத் தெழுந்தருளிப்
- பொருதவனார் பேர்சொல்லி, நீர்காலத் தெருக்கிலம்
- பழவிலைபோல் வீழ்வேனை, வார்காலத் தொருநாள்தம்
- வாசகம்தந் தருளாரே.
|
584
|
82
|
மதயானை போலெழுந்த
- மாமுகில்காள், வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்.
- பாம்பணையான் வார்த்தையென்னே, கதியென்றும் தானாவான்
- கருதாது,ஓர் பெண்கொடியை வதைசெய்தான். என்னும்சொல்
- வையகத்தார் மதியாரே.
|
585
|
83
|
நாகத்தி னணையானை
- நன்னுதலாள் நயந்துரைசெய், மேகத்தை வேங்கடக்கோன்
- விடுதூதில் விண்ணப்பம், போகத்தில் வழுவாத
- புதுவையர்கோன் கோதைதமிழ், ஆகத்து வைத்துரைப்பார்
- அவரடியா ராகுவரே.
|
586
|
84
|
சிந்துரச் செம்பொடிப்போல்
- திருமாலிருஞ் சோலையெங்கும், இந்திர கோபங்களே
- எழுந்தும்பரந் திட்டனவால், மந்தரம் நாட்டியன்று
- மதுரக்கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையான்
- சுழலையினின் றுய்துங்கொலோ.
|
587
|
85
|
போர்களி றுபொரும்மா
- லிருஞ்சோலையம் பூம்புறவில், தார்க்கொடி முல்லைகளும்
- தவளநகை காட்டுகின்ற, கார்க்கொள் படாக்கள்நின்று
- கழறிச்சிரிக் கத்தரியேன், ஆர்க்கிடு கோதோழி.
- அவன்தார்ச்செய்த பூசலையே.
|
588
|
86
|
கருவிளை யொண்மலர்காள்.
- காயாமலர் காள்,திருமால் உருவொளி காட்டுகின்றீர்
- எனக்குய்வழக் கொன்றுரையீர், திருவிளை யாடுதிண்டோ ள்
- திருமாலிருஞ் சோலைநம்பி, வரிவளை யில்புகுந்து
- வந்திபற்றும் வழ்க்குளதே.
|
589
|
87
|
பைம்பொழில் வாழ்குயில்காள்.
- மயில்காள்.ஒண் கருவிளைகாள், வம்பக் களங்கனிகாள்.
- வண்ணப்பூவை நறுமலர்காள், ஐம்பெரும் பாதகர்காள்.
- அணிமாலிருஞ் சோலைநின்ற, எம்பெரு மானுடைய
- நிறமுங்களுக் கெஞ்செய்வதே
|
590
|
88
|
துங்க மலர்ப்பொழில்சூழ்
- திருமாலிருஞ் சோலைநின்ற, செங்கட் கருமுகிலின்
- திருவுருப் போல்,மலர்மேல் தொங்கிய வண்டினங்காள்.
- தொகுபூஞ்சுனை காள்,சுனையில் தங்குசெந் தாமரைகாள்.
- எனக்கோர்சரண் சாற்றுமினே.
|
591
|
89
|
நாறு நறும்பொழில்மா
- லிருஞ்சோலை நம்பிக்கு, நான் நூறு தடாவில்வெண்ணெய்
- வாய்நேர்ந்து பராவிவைத்தேன், நூறு தடாநிறைந்த
- அக்கார வடிசில்சொன்னேன், ஏறு திருவுடையான்
- இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
|
592
|
90
|
இன்றுவந் தித்தனையும்
- அமுதுசெய் திடப்பெறில்,நான் ஒன்று நூறாயிரமாக்
- கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன், தென்றல் மணங்கமழும்
- திருமாலிருஞ் சோலைதன்னுள் நின்ற பிரான்,அடியேன்
- மனத்தேவந்து நேர்படிலே.
|
593
|
91
|
காலை யெழுந்திருந்து
- கரியகுரு விக்கணங்கள், மாலின் வரவுசொல்லி
- மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ, சோலை மலைப்பெருமான்
- துவராபதி யெம்பெருமான், ஆலி னிலைப்பெருமான்
- அவன் வார்த்தை யுரைக்கின்றதே.
|
594
|
92
|
கோங்கல ரும்பொழில்மா-
- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் தூங்குபொன் மாலைகளோ-
- டுடனாய்நின்று தூங்குகின்றேன், பூங்கொள் திருமுகத்து
- மடுத்தூதிய சங்கொலியும், சார்ங்கவில் நாணொலியும்
- தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ.
|
595
|
93
|
சந்தொடு காரகிலும்
- சுமந்துதடங் கள்பொருது, வந்திழி யும்சிலம்பா-
- றுடைமாலிருஞ் சோலைநின்ற, சுந்தரனை, சுரும்பார்
- குழல்கோதை தொகுத்துரைத்த, செந்தமிழ் பத்தும்வல்லார்
- திருமாலடி சேர்வர்களே.
|
596
|
94
|
கார்க்கோடல் பூக்காள்.கார்க்கடல்
- வண்ணனென் மேல்உம்மைப் போர்க்கோலம் செய்து போர
- விடுத்தவ னெங்குற்றான், ஆர்க்கோ இனிநாம் பூச
- லிடுவது, அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப்
- படைக்கவல் லேனந்தோ.
|
597
|
95
|
மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
- கங்களின் மீதுபோய், மேற்றோன்றும் சோதி வேத
- முதல்வர் வலங்கையில், மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
- போலச் சுடாது,எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
- வைத்துகொள் கிற்றிரே.
|
598
|
96
|
கோவை மணாட்டி.நீயுன்
- கொழுங்கனி கொண்டு,எம்மை ஆவி தொலைவியேல் வாயழ-
- கர்தம்மை யஞ்சுதும் பாவி யேன்தோன்றிப் பாம்பணை-
- யார்க்கும்தம் பாம்புபோல், நாவு மிரண்டுள வாய்த்து
- நாணிலி யேனுக்கே.
|
599
|
97
|
முல்லைப் பிராட்டி.நீயுன்
- முறுவல்கள் கொண்டு,எம்மை அல்லல் விளைவியே லாழிநங்
- காய்.உன்ன டைக்கலம், கொல்லை யரக்கியை மூக்கரிந்
- திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால், நானும்
- பிறந்தமை பொய்யன்றே.
|
600
|
98
|
பாடும் குயில்காள். ஈதென்ன
- பாடல்,நல் வேங்கட நாடர் நமக்கொரு வாழ்வுதந்
- தால்வந்து பாடுமின், ஆடும் கருளக் கொடியுடை
- யார்வந் தருள்செய்து, கூடுவ ராயிடில் கூவிநும்
- பாட்டுகள் கேட்டுமே.
|
601
|
99
|
கணமா மயில்காள். கண்ணபி
- ரான்திருக் கோலம்போன்று, அணிமா நடம்பயின் றாடுகின்
- றீர்க்கடி வீழ்கின்றேன், பணமா டரவணைப் பற்பல
- காலமும் பள்ளிகொள், மணவாளர் நம்மை வைத்த
- பரிசிது காண்மினே.
|
602
|
100
|
நடமாடித் தோகை விரிக்கின்ற
- மாமயில் காள்,உம்மை நடமாட்டங் காணப் பாவியேன்
- நானோர் முதலிலேன், குடமாடு கூத்தன் கோவிந்தன்
- கோமிறை செய்து,எம்மை உடைமாடு கொண்டா னுங்களுக்
- கினியொன்று போதுமே ?
|
603
|
101
|
மழையே.மழையே.மண்புறம்
- பூசியுள் ளாய்நின்ற, மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்
- வேங்கடத் துள்நின்ற, அழகப் பிரானார் தம்மையென்
- நெஞ்சத் தகப்படத் தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண்
- டூற்றவும் வல்லையே?
|
604
|
102
|
கடலே. கடலே.உன்னைக்
- கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்துநின் றூறல்
- அறுத்தவற்கு, என்னையும் உடலுள் புகுந்துநின் றூறல்
- அறுக்கின்ற மாயற்குஎன் நடலைக ளெல்லாம் நாகணைக்
- கேசென்று ரைத்தியே.
|
605
|
103
|
நல்லஎன் தோழி. நாக
- ணைமிசை நம்பரர், செல்வர் பெரியர் சிறுமா
- னிடவர்நாம் செய்வதென், வில்லி புதுவை விட்டுசித்
- தர்தங்கள் தேவரை, வல்ல பரிசு வருவிப்ப
- ரேலது காண்டுமே.
|
606
|
104
|
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே.
|
607
|
105
|
எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர்,
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.
|
608
|
106
|
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே.
|
609
|
107
|
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ?
|
610
|
108
|
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே.
|
611
|
109
|
கைப்பொருள்கள் முன்னமே
- கைக்கொண்டார், காவிரிநீர் செய்ப்புரள வோடும்
- திருவரங்கச் செல்வனார், எப்பொருட்கும் நின்றார்க்கு
- மெய்தாது, நான்மறையின் சொற்பொருளாய் நின்றாரென்
- மெய்ப்பொருளும் கொண்டாரே.
|
612
|
110
|
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்,
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே.
|
613
|
111
|
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே.
|
614
|
112
|
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே.
|
615
|
113
|
செம்மை யுடைய
- திருவரங்கர் தாம்பணித்த, மெய்ம்மைப் பெருவார்த்தை
- விட்டுசித்தர் கேட்டிருப்பர், தம்மை யுகப்பாரைத்
- தாமுகப்ப ரென்னும்சொல், தம்மிடையே பொய்யானால்
- சாதிப்பா ராரினியே .
|
616
|
114
|
மற்றிருந் தீர்கட் கறியலாகா
- மாதவ னென்பதோ ரன்புதன்னை, உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
- ஊமைய ரோடு செவிடர்வார்த்தை, பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
- பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி, மற்பொருந் தாமற் களமடைந்த
- மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்.
|
617
|
115
|
நாணி யினியோர் கருமமில்லை
- நாலய லாரும் அறிந்தொழிந்தார், பாணியா தென்னை மருந்து செய்து
- பண்டுபண் டாக்க வுறுதிராகில், மாணி யுருவா யுலகளந்த
- மாயனைக் காணில் தலைமறியும், ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
- ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
|
618
|
116
|
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
- தனிவழி போயினாள். என்னும்சொல்லு, வந்தபின் னைப்பழி காப்பரிது
- மாயவன் வந்துருக் காட்டுகின்றான், கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
- குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற, நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
- நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்.
|
619
|
117
|
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
- அவன்முகத் தன்றி விழியேனென்று, செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
- சிறுமா னிடவரைக் காணில்நாணும், கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
- கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா, இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
- யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.
|
620
|
118
|
ஆர்க்குமென் நோயி தறியலாகா
- தம்மனை மீர்.துழ திப்படாதே, கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
- கைகண்ட யோகம் தடவத்தீரும், நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
- காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து, போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
- பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.
|
621
|
119
|
கார்த்தண் முகிலும் கருவிளையும்
- காயா மலரும் கமலப்பூவும், ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்
- டிருடீகே சன்பக்கல் போகேயென்று, வேர்த்துப் பசித்து வயிறசைந்து
- வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும்
- பத்தவி லோசநத் துய்த்திடுமின்.
|
622
|
120
|
வண்ணம் திரிவும் மனங்குழைவும்
- மானமி லாமையும் வாய்வெளுப்பும், உண்ண லுறாமையு முள்மெலிவும்
- ஓதநீர் வண்ணனென் பானொருவன், தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
- சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப் பண்ணழி யப்பல தேவன்வென்ற
- பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்.
|
623
|
121
|
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
- காடுவாழ் சாதியு மாகப்பெற்றான், பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
- பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ, கற்றன பேசி வசையுணாதே
- காலிக ளுய்ய மழைதடுத்து, கொற்றக் குடையாக வேந்திநின்ற
- கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்.
|
624
|
122
|
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
- கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும், ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
- உலகளந் தான். என் றுயரக்கூவும், நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
- நன்மை யிழந்து தலையிடாதே, சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
- துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்.
|
625
|
123
|
மன்னு மதுரை தொடக்கமாக
- வண்துவ ராபதி தன்னளவும், தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
- தாழ்குழ லாள்துணிந் ததுணிவை, பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
- புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
- ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.
|
626
|
124
|
கண்ண னென்னும் கருந்தெய்வம்
- காட்சி பழகிக் கிடப்பேனை, புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
- புறநின் றழகு பேசாதே, பெண்ணின் வருத்த மறியாத
- பெருமா னரையில் பீதக வண்ண ஆடை கொண்டு,என்னை
- வாட்டம் தணிய வீசீரே.
|
627
|
125
|
பாலா லிலையில் துயில்கொண்ட
- பரமன் வலைப்பட் டிருந்தேனை, வேலால் துன்னம் பெய்தாற்போல்
- வேண்டிற் றெல்லாம் பேசாதே, கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
- குடந்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
- நெறிமேன் குழல்மேல் சூட்டீரே.
|
628
|
126
|
கஞ்சைக் காய்ந்த கருவல்லி
- கடைக்க ணென்னும் சிறைக்கோலால், நெஞ்சூ டுருவ வேவுண்டு
- நிலையும் தளர்ந்து நைவேனை, அஞ்சே லென்னா னவனொருவன்
- அவன்மார் வணிந்த வனமாலை, வஞ்சி யாதே தருமாகில்
- மார்வில் கொணர்ந்து புரட்டீரே.
|
629
|
127
|
ஆரே யுலகத் தாற்றுவார்
- ஆயர் பாடி கவர்ந்துண்ணும், காரே றுழக்க வுழக்குண்டு
- தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, ஆரா வமுத மனையான்றன்
- அமுத வாயி லூறிய, நீர்தான் கொணர்ந்து புலராமே
- பருக்கி யிளைப்பை நீக்கிரே.
|
630
|
128
|
அழிலும் தொழிலு முருக்காட்டான்
- அஞ்சே லென்னா னவனொருவன், தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
- சுற்றிச் சுழன்று போகானால், தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
- நெடுமா லூதி வருகின்ற குழலின் தொளைவாய் நீர்கொண்டு
- குளிர முகத்துத் தடவீரே.
|
631
|
129
|
நடையொன் றில்லா வுலகத்து
- நந்த கோபன் மகனென்னும், கொடிய கடிய திருமாலால்
- குளப்புக் கூறு கொளப்பட்டு, புடையும் பெயர கில்லேன்நான்
- போட்கன் மிதித்த அடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
- போகா வுயிரென் னுடம்பையே.
|
632
|
130
|
வெற்றிக் கருள கொடியான்றன்
- மீமீ தாடா வுலகத்து, வெற்ற வெறிதே பெற்றதாய்
- வேம்பே யாக வளர்த்தாளே, குற்ற மற்ற முலைதன்னைக்
- குமரன் கோலப் பணைத்தோளோடு, அற்ற குற்ற மவைதீர
- அணைய வமுக்கிக் கட்டீரே.
|
633
|
131
|
உள்ளே யுருகி நைவேனை
- உளளோ இலளோ வென்னாத, கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
- கோவர்த் தனனைக் கண்டக்கால், கொள்ளும் பயனொன் றில்லாத
- கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
- எறிந்தென் அழலை தீர்வேனே.
|
634
|
132
|
கொம்மை முலைக ளிடர்தீரக்
- கோவிந் தற்கோர் குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே
- இனிப்போய்ச் செய்யும் தவந்தானென், செம்மை யுடைய திருமார்வில்
- சேர்த்தா னேலும் ஒருஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
- விடைதான் தருமேல் மிகநன்றே.
|
635
|
133
|
அல்லல் விளைத்த பெருமானை
- ஆயர் பாடிக் கணிவிளக்கை, வில்லி புதுவை நகர்நம்பி
- விட்டு சித்தன் வியன்கோதை, வில்லைத் தொலைத்த புருவத்தாள்
- வேட்கை யுற்று மிகவிரும்பும், சொல்லைத் துதிக்க வல்லார்கள்
- துன்பக் கடளுள் துவளாரே.
|
636
|
134
|
பட்டி மேய்ந்தோர் காரேறு
- பலதே வற்கோர் கீழ்க்கன்றாய், இட்டீ றிட்டு விளையாடி
- இங்கே போதக் கண்டீரே?- இட்ட மான பசுக்களை
- இனிது மறித்து நீரூட்டி, விட்டுக் கொண்டு விளையாட
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
637
|
135
|
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
- தாயர் பாடி கவர்ந்துண்ணும், குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
- கோவர்த் தனனைக் கண்டீரே?- கணங்க ளோடு மின்மேகம்
- கலந்தாற் போல, வனமாலை மினுங்க நின்று விளையாட
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
638
|
136
|
மாலாய்ப் பிரந்த நம்பியை
- மாலே செய்யும் மணாளனை, ஏலாப் பொய்க ளுரைப்பானை
- இங்கே போதக் கண்டீரே?- மேலால் பரந்த வெயில்காப்பான்
- வினதை சிறுவன் சிறகென்னும், மேலாப் பின்கீழ் வருவானை
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
639
|
137
|
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
- நெடுங்கயி றுபடுத் தி,என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்
- ஈசன் றன்னைக் கண்டீரே?- போர்த்த முத்தின் குப்பாயப்
- புகர்மால் யானைக் கன்றேபோல், வேர்த்து நின்று விளையாட
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
640
|
138
|
மாத வன்என் மணியினை
- வலையில் பிழைத்த பன்றிபோல், ஏது மொன்றும் கொளத்தாரா
- ஈசன் றன்னைக் கண்டீரே?- பீதக வாடை யுடைதாழப்
- பெருங்கார் மேகக் கன்றேபோல், வீதி யார வருவானை
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
641
|
139
|
தரும மறியாக் குறும்பனைத்
- தங்கைச் சார்ங்க மதுவேபோல், புருவ வட்ட மழகிய
- பொருத்த மிலியைக் கண்டீரே?- உருவு கரிதாய் முகம்செய்தாய்
- உதயப் பருப்ப தத்தின்மேல், விரியும் கதிரே போல்வானை
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
642
|
140
|
பொருத்த முடைய நம்பியைப்
- புறம்போ லுள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்றஅக்
- கருமா முகிலைக் கண்டீரே?- அருத்தித் தாரா கணங்களால்
- ஆரப் பெருகு வானம்போல், விருத்தம் பெரிதாய் வருவானை
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
643
|
141
|
வெளிய சங்கொன் றுடையானைப்
- பீதக வாடை யுடையானை, அளிநன் குடைய திருமாலை
- ஆழி யானைக் கண்டீரே?- களிவண் டெங்கும் கலந்தாற்போல்
- கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல், மிளிர நின்று விளையாட
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
644
|
142
|
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
- தந்த நளிர்மா மலருந்தி, வீட்டைப் பண்ணி விளையாடும்
- விமலன் றன்னைக் கண்டீரே?- காட்டை நாடித் தேனுகனும்
- களிறும் புள்ளு முடன்மடிய, வேட்டை யாடி வருவானை
- விருந்தா வனத்தே கண்டோ மே.
|
645
|
143
|
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
- பரமன் றன்னை, பாரின்மேல் விருந்தா வனத்தே கண்டமை
- விட்டு சித்தன் கோதைசொல், மருந்தா மென்று தம்மனத்தே
- வைத்துக் கொண்டு வாழ்வார்கள், பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
- பிரியா தென்று மிருப்பாரே.
|
646
|