உயிர் வரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 42: | வரிசை 42: | ||
இப்படி ஒலிப்பது, எழுதுவது தமிழ் மரபு |
இப்படி ஒலிப்பது, எழுதுவது தமிழ் மரபு |
||
ஒரு < > ஓர் |
==ஒரு < > ஓர்== |
||
இவற்றைப் போலவே |
இவற்றைப் போலவே |
02:05, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
தமிழில் சொல்லோடு சொல் புணரும்போது சில நிலைமொழிச் சொற்கள் வருமொழியில் உள்ள முதல் எழுத்து உயிராக இருக்கும்போதும், மெய்யாக இருக்கும்போதும் சில மாற்றங்களைப் பெறுஉகின்றன. இவை பண்டைய இலக்கிய ஆட்சியில் மரபாகக் கடைப்பிடிக்கப் பட்டுள்ளன. இவற்றை இலக்கண நூலார் வரையறுத்துக் காட்டவுல்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்கள் தம் உரைகளில் இந்த மரபினைக் கடைப்பிடித்துள்ளனர். இங்குத் திருக்குறள் ஆட்சி மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
- குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
- எந்நலத்து உள்ளதூஉம் அன்று. [1]
- அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
- ஐந்துசால்(பு) ஊன்றிய தூண். [2]
- பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
- வாலெயி றூறிய நீர் [3]
ம் < > ன்
நலம் - நலன் என்று வரும் சொற்கள் இரண்டும் ஒன்றே.
சான்றோர் என்னும் மெய்-ஒலியை முதன்மையாக உடைய சொல். இது வந்து புணரும்போது [ம்] என்று நிற்கிறது
[நலன்+ஏ] என்று புணரும்போது, வருமொழி [ஏ] என்னும் இடைச்சொல் உயிரெழுத்து. இப்படி உயிர் வரும்போது [ன்] என்று நிற்கிறது
தொல்காப்பியர் இதுபற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியம்
ஒடு < > ஓடு - ஆல் < > ஆன்
மூன்றாம் வேற்றுமை உருபு
வாய்மையோடு ஐந்து - என்னும்போது [ஓடு] என்னும் வேற்றுமை உருபு ஓர் இடைச்சொல் உயிரோடு புணரும்போது "ஓடு" என்று நீண்டு நிற்கிறது
பாலொடு தேன் - என்னும்போது மெய்யொலியை முதலாக உடைய சொல் வந்து புணர்கிறது எனவே "ஒடு" என்று அச்சொல் குறுகி நின்று புணர்கிறது
வேலனொடு பாலன் வந்தான் வேலனோடு ஆதிரை வந்தாள்
கோலால் கிண்டினான் கோலான் அடித்தான் (அருகி வருவன)
இப்படி ஒலிப்பது, எழுதுவது தமிழ் மரபு
ஒரு < > ஓர்
இவற்றைப் போலவே ஓராண்டு - ஈராண்டு - என்றும் ஒருவகை - இருவகை - என்றும் எழுதுவது தமிழ்மரபு