உயிர் வரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வருமொழி முதல் உயிரா, மெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:03, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

வருமொழி முதல் உயிரா, மெய்யா

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்

மேலை காட்டப்பட்டுள்ளவை திருக்குறள்.

ம் < > ன்

நலம் - நலன் என்று வரும் சொற்கள் இரண்டும் ஒன்றே.

சான்றோர் என்னும் மெய்-ஒலியை முதன்மையாக உடைய சொல். இது வந்து புணரும்போது [ம்] என்று நிற்கிறது

[நலன்+ஏ] என்று புணரும்போது, வருமொழி [ஏ] என்னும் இடைச்சொல் உயிரெழுத்து. இப்படி உயிர் வரும்போது [ன்] என்று நிற்கிறது

தொல்காப்பியர் இதுபற்றிக் குறிப்பிடுகிறார் ஒடு < > ஓடு - ஆல் < > ஆன் மூன்றாம் வேற்றுமை உருபு

வாய்மையோடு ஐந்து - என்னும்போது [ஓடு] என்னும் வேற்றுமை உருபு ஓர் இடைச்சொல் உயிரோடு புணரும்போது "ஓடு" என்று நீண்டு நிற்கிறது

பாலொடு தேன் - என்னும்போது மெய்யொலியை முதலாக உடைய சொல் வந்து புணர்கிறது எனவே "ஒடு" என்று அச்சொல் குறுகி நின்று புணர்கிறது

வேலனொடு பாலன் வந்தான் வேலனோடு ஆதிரை வந்தாள்

கோலால் கிண்டினான் கோலான் அடித்தான் (அருகி வருவன)

இப்படி ஒலிப்பது, எழுதுவது தமிழ் மரபு

ஒரு < > ஓர்

இவற்றைப் போலவே ஓராண்டு - ஈராண்டு - என்றும் ஒருவகை - இருவகை - என்றும் எழுதுவது தமிழ்மரபு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_வரின்&oldid=2869780" இலிருந்து மீள்விக்கப்பட்டது