திராயன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி இணைப்பு: cy:Rhyfel Caerdroea |
சி தானியங்கி மாற்றல்: vi:Chiến tranh thành Troia |
||
வரிசை 85: | வரிசை 85: | ||
[[uk:Троянська війна]] |
[[uk:Троянська війна]] |
||
[[ur:ٹرائے کی جنگ]] |
[[ur:ٹرائے کی جنگ]] |
||
[[vi:Chiến tranh thành |
[[vi:Chiến tranh thành Troia]] |
||
[[yi:טרויאנישער קריג]] |
[[yi:טרויאנישער קריג]] |
||
[[zh:特洛伊战争]] |
[[zh:特洛伊战争]] |
21:13, 26 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
றோய்யன் போர் (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டுகள் நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி, றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.
கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.
கெலனின் சுயம்வரம்
கிரேக்க நாட்டின் ஒரு நகரம் ஸ்பாற்ரா ஆகும். ஸ்பாற்ராவை ரின்டர்யஸ் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடியஸ் என்னும் இளவரசன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். கெலன், மெனெலஸ் என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.
பரிஸின் தீர்ப்பு
இச்சமயம் பரிஸ் என்ற றோய் நாட்டு இளவரசன் ஸ்பாற்ராவிற்கு வந்தான். அஃறோடைரி என்ற காதல் தேவதைக்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பரிஸ், கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பரிஸ் கெலனைக் கவர்ந்து றோய்க்குக் கொண்டு சென்றான்.
"ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு"
கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் றோய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறிஸ்தோபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் றோய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, றோய் அழிந்து போனது.
வரலாற்றுக் கூற்றுக்கள்
இப்போர் அல்லது இப்போரை ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது குறித்து எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரைப் பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.