க. ப. அறவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் using HotCat |
|||
வரிசை 25: | வரிசை 25: | ||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1941 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1941 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
06:36, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
க.ப. அறவாணன் (பிறப்பு: ஆகத்து 9 1941 தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலணி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (தஞ்சாவூர்) ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமன்ணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாரும் இஸ்லாமியத் தமிழலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
எழுதிய நூல்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;
- சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை
- தொல்காப்பியக் களஞ்சியம்
- கவிதை கிழக்கும் மேற்கும்
- அற்றையநாள் காதலும் வீரமும்
- தமிழரின் தாயகம்
- தமிழ்ச் சமுதாய வரலாறு
இதழ் ஆசிரியர்
இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்
- அறிவியல் தமிழியம்
- தேடல்
- முடியும்
- கொங்கு
பதிப்பாசிரியர்
இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.
அறவாணர் விருது
இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
விருதுகளும் கௌரவங்களும்
- தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
- 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011