குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"குலோத்துங்கசோழன் பிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 15: வரிசை 15:
==கருவிநூல்==
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]

06:55, 5 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் ஒட்டக்கூத்தர் 12ஆம் நூற்றாண்டில் பாடிய நூல்களில் ஒன்று. இது முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த பாடல்களைச் செப்பம் செய்து பண்டிதர் உலகநாத பிள்ளை 1933இல் வெளியிட்டார். அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன.

பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் எனக் கொள்ளும் வகையில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

அதற்குப் பின்னர் முதன்முதலாகத் தோன்றிய பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம் இது.

குலோத்துங்கனை இந்த நூல் ‘எதிலாப் பெருமாள்’, ‘அபயன்’ எனப் பலமுறை குறிப்பிடுகிறது. இவன் தில்லையில் செய்த திருப்பணியை ‘வேகம் நிரம்பு திருவீதி புலியூரில் செய்த பெருமாள்’ என்று இந் நூல் குறிப்பிடுகிறது. ஓரிடத்தில் மட்டும் இவனை இந் நூல் ‘இராசேந்திர சோழன்’ எனக் குறிப்பிடுகிறது.

இந்தக் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திகள் ‘பூ மன்னு’ என்னும் தொடரில் தொடங்குகின்றன. அதுபோலவே இந்த நூலும் ‘பூமன்னு பொழில் ஏழும்’ என்று தொடங்குகிறது.

  • நூலில் வரும் பாடலடிக்கு எடுத்துக்காட்டு.

மல்லையில் வழங்குமிள வேறுமுது கஞ்சன்

வஞ்சவய வேறுபடி யத்தழுவு மல்லா

முல்லையில் வெறுஞ்சில துழாய்கமழ் முகுந்தா

முன்பொருவ லம்புரி முழங்குமுகில் வண்ணா

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005