க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1
ஆசிரியர் பண்டிதர் க. அயோத்திதாசர்
வெளியீட்டாளர் தலித் சாகித்யஅகாடமி
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 158
அளவு| 13.42 மெகாபைட்டுகள்
தமிழ் விக்கிமீடியா-த.இ.க.க. கூட்டுத்திட்டம்
பொதுகள உரிமம் (cco 1.0)
மூலம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்


நூலின் பொருளடக்கம்

க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பது க. அயோத்திதாசப் பண்டிதர்[1] வெவ்வேறு ஆண்டுகளில் தனித்தனி நூல்களாகப் பார்ப்பனியத்தை விமர்சித்து எழுதிய ஐந்து நூல்களின் தொகுப்பு நூலாகும். பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இந்நூல்களைத் தலித் சாகித்ய அகாடமி என்ற பதிப்பகத்தார், 1999 ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த விழிப்புணர்வு நூலாகும். தமிழ்நாடு அரசு அறிவித்த, நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில், இந்நூலும் ஒன்றாகும்.

சாதியம் குறித்த விழிப்புணர்வை இந்நூல் பிரதானமாக வழங்குகிறது.[2] நூலாசிரியரின் எழுத்தாக்கத்தால், இந்திய சட்ட அறிஞர் அம்பேத்கர், பெளத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்து, மன எழுச்சி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

உள்ளடக்கம்[தொகு]

வெவ்வேறு காலகட்டத்தில் அரசியல் சமூகம் சார்ந்து நூலாசிரியர் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இம்முதல் தொகுதி ஐந்து நூல்கள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

வ.எண் தலைப்பு பக்கஎண் குறிப்புகள் - கருப்பொருள் சுருக்கம்
1. யதார்த்த பிராமண வேதாந்த விவரம் 1
2. வேஷ பிராமண வேதாந்த விவரம் 06
3. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி 85
4. விபூதி ஆராய்ச்சி 107
5. அரிச்சந்திரன் பொய்கள் 128

மேற்கோள்[தொகு]

  1. பண்டிதர் க. அயோத்திதாசரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல் வடிவம் உள்ள தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் நூலகப்பிரிவு
  2. கலாநிதி ந. இரவீந்திரனின் ‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்’ நூல் பற்றிய கருத்தாடல்கள்

உயவுத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

.