வேங்கட கிருஷ்ணன் கோவில், வேலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில் தொரப்பாடியில் (துறைப்பாடி) உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில். ராதா ருக்மணி உடனுறை வேங்கட கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

இக்கோவிலில் உற்சவர் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி.
இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் இரு கை கூப்பிய நிலையில் பக்த ஆஞ்சநேயராக அருள் பாலிக்கின்றார்
இத்திருக்கோவில் 150 ஆண்டிற்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.

விழாக்கள்[தொகு]

  • கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும் அந்நாளில் கிருஷ்ணன் திருவீதி உலா சிறப்பாக நடைபெறும் இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
மேலும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் திருப்பாவை சேவை நடைபெறும்.
மார்கழி மாத முக்கோட்டி ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும்.
அன்றைய தினம் பெருமாள் கருடவாகன புறப்பாடு நடக்கும்.அன்றிரவு ஏகாந்த சேவை நடைபெறும்
மார்கழி மாத கூடரவெள்ளி தினத்தன்று ராதா ருக்மணி வேணுகோபால் சுவாமி திருக்கல்யாணம்

சிறப்பாக நடைபெறும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் வீதி பஜனை நடைபெறும்

பொங்கல் தினத்தன்று கிருஷ்ணன் திருவீதி உலா எழுந்தருள்வார்

கோவில் அமைப்பு[தொகு]

இத்திருக்கோவில் வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் (தங்க கோவில்) செல்லும் வழியில் தொரப்பாடி என்ற இடத்தில் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ளது
இத்திருக்கோவில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும் கருவறை விமானமும் அமைந்துள்ளது
இக்கோவிலில் மூலவர் வேங்கட கிருஷ்ணன் எங்கும் இல்ல வகையில் புன்னகை புரிபவராக உள்ளார்
இக்கோவிலில் வைணவம் முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.