வீரன் அம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரன் அம்பலம் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முக்கிய பிரமுகராக முந்தைய காலகட்டத்தில் அறியப்பட்டவர். வீரன் அம்பலம் 1980, 1984 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரின் தந்தை பெயர் வெள்ளாண்டி அம்பலம் (நிலக்கிழார்). சொந்த ஊர் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஆகும். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரன்_அம்பலம்&oldid=3804344" இலிருந்து மீள்விக்கப்பட்டது