உள்ளடக்கத்துக்குச் செல்

வீரசிங்காதன புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரசிங்காதன புராணம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன.

வீரசிங்காதனப் புராணம் என்னும் நூல் சிவப்பிரகாசருடைய தம்பி வேலைய சுவாமிகளாலும், பின்னர் கோட்டூர் உமைபாக தேவராலும் பாடப்பட்டது. வேலைய சுவாமிகள் 387 பாடல்கள் பாடினார். இவர் 1719-ல் காலமானார். பின்னர் உமைபாக தேவர் மேலும் 488 பாடல்கள் பாடி நூலை நிறைவுசெய்தார். தக்கயாகப் பரணி நூல் தோன்றிய முறைமை பற்றி இதில் கூறப்படும் கதை முழுவதும் கற்பனை. [1]

மற்றொன்று உமாபதி சிவாசாரியர் எழுதினார் எனவும் தெரியவருகிறது. இது பற்றிய வேறு செய்தி ஏதும் கிடைக்கவில்லை.[2]

உசாத்துணை

[தொகு]
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 343
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசிங்காதன_புராணம்&oldid=4402929" இலிருந்து மீள்விக்கப்பட்டது