வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவிடன்ஸ் கதிர்
பிறப்புவின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி
தமிழ்நாடு
தேசியம் இந்தியா
அறியப்படுவதுதீண்டாமை ஒழிப்பு

வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி என்ற எவிடன்ஸ் கதிர் என்பவர் மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளராவார். எவிடன்ஸ் என்ற மதுரையை மையமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பின் நிறுவனத்தலைவராவார்.[1] ஐரோப்பிய கவுன்சில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் ரவுல் வாலன்பெர்க் விருதினை 2022 ஆம் ஆண்டு பெற்றார்.[2] 3,000 மனித உரிமை மீறல் சம்பவங்களிலிருந்து பாதிக்கப்பட்ட சுமார் 25,000 பேரை மீட்டுள்ளார். தலித்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்துள்ளார்.[2]

எழுதிய நூல்கள்[தொகு]

  1. சாதி தேசத்தின் சாம்பல் பறவை

மேற்கோள்கள்[தொகு]

  1. "International award for Evidence". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/international-award-for-evidence/article38282832.ece. பார்த்த நாள்: 17 January 2022. 
  2. 2.0 2.1 "Defender of disadvantaged population of "untouchables" in India receives Raoul Wallenberg Prize". Council of Europe. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.