விநாயகர் சிற்பம் (பூதவராயர் குளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விநாயகர் சிற்பம் (பூதராயர் குளம்), நல்லூரில், தற்போது சட்டநாதர் சிவன் கோயில் அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் உள்ள பூதவராயர் குளத்தை ஆழமாக்கும் முயற்சியின்போது 1957ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பல கருங்கற் சிலைகளுள் ஒன்று. இது 14ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த சிற்பமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[1] யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏதோவொரு கோயிலில் இருந்த இச்சிலையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாப்பதற்காக இவ்விடத்தில் புதைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது இப்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் உள்ளது.

அமைப்பு[தொகு]

வலதுகாலை நிலைக்குத்தாகவும், இடதுகாலைக் குறுக்காகவும் மடித்தபடி இருக்கும் நிலையில் இச்சிற்பம் உள்ளது. நான்கு கைகளைக்கொண்ட இவ்வுருவத்தில் வலது முன்கையில் உடைத்தெடுக்கப்பட்ட ஒருபக்கத் தந்தத்தையும், இடது முன்கை மோத்கத்தையும் தாங்கியபடி காணப்படுகின்றன. பின்புற வலது கையில் பரிசும், இடது கையில் பாசமும் உள்ளன. இவ்விநாயகரின் முடியமைப்பும், அணிந்திருக்கும் அணிகலன்களும், இச்சிற்பம் பிற்காலப் பாண்டியர்காலப் பாணியில் இருப்பதாக கிருஷ்ணராஜா கூறுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிருஷ்ணராஜா, செல்லையா., 2015, பக். 154
  2. கிருஷ்ணராஜா, செல்லையா., 2015, பக். 154

உசாத்துணைகள்[தொகு]

  • கிருஷ்ணராஜா, செல்லையா., சிற்பக்கலைமரபுகள் மற்றும் குளங்களின் பெயர்களினூடாக அறியப்படும் நல்லூரின் பண்பாடு, சிங்கை ஆரம் பிரதேச மலர், நல்லூர்ப் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை, நல்லூர், 2015. பக். 149-167.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]