விக்ன கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் விக்ன கணபதியின் உருவப்படம்.

விக்ன கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 9வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார்.

திதி[தொகு]

விக்ன விநாயகருக்கு(கணபதி) உகந்த திதி நவமி ஆகும். அன்று விக்ன விநாயகருக்கு அபிசேகம், தீபம் காட்டி வழிபட்டால் பொன் வியாபாரி, வட்டி கடை நடத்துபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும்[1]. நவமி திதி அன்று விக்ன கணபதியின் பெயரை 21 முறையோ, 108 முறையோ கூறி பக்தியுடன் வழிபட்டால் சிக்கல்கள், தொல்லைகள் யாவும் விலகி சகல வளங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3382&cat=3
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-07. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ன_கணபதி&oldid=3571536" இலிருந்து மீள்விக்கப்பட்டது