விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 14, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • 1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மர் (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.
  • விமானத்திலிருந்து பார்க்கும் பயணிக்கு வானவில் வட்ட வடிவமாகத் தெரியும்.
  • பகலொளி சேமிப்பு நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.
  • காற்றிசைக் கருவியான நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது.
  • தும்பிக்கை காயம்பட்டாலோ, துண்டிக்கப்பட்டாலோ யானையால் உயிர்வாழ இயலாது.
  • உலகிலேயே மிகவும் மெல்லிய பொருளான கிராபீன், உலகிலேயே மிகவும் உறுதியான பொருளும் கூட! எஃகை விட இது 100 மடங்கு உறுதியானது.
  • கணிதத்தில், ஒரு பல்கோண எண் என்பது, ஒழுங்கான பல்கோண வடிவில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு எண்ணாகும்.