விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 5, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடாவெட்டு

பலி கொடுத்தல் ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். பலி கொடுத்தல் கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். யாகம், பூசை போன்ற சடங்குகளோடு இது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்து சமயத்தின் பெரும்பான்மைக் கோயில்களில் பலி கொடுத்தல் நெடுங்காலமாக வழக்கத்தில் இல்லை. ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

படம்: அருணன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்