ரெவரெண்ட் ஜெ. இ. கிரண்ட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

' மேதகு ஜெ. இ. கிரண்டிலர் 1677 ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் வெய்சென்சீ எனுமிடத்தில் பிறந்தார். கெலே எனுமிடத்தில் கல்வி பயின்றார். கோப்பனேகனில் 1708 இல் பாதிரியாராக அமர்த்தப்பட்டார்.

இந்திய வருகை[தொகு]

1708 ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் கப்பலேறி 1709 ஜூலை 20 ஆம் நாள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தார்.

திருமணம்[தொகு]

1716 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தமிழ்ப் பணி[தொகு]

தமிழ் மருந்துகள் எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இறப்பு[தொகு]

1720 ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் காலமானார். ஜெருசலம் மாதா கோயிலில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பார்வை நூல்[தொகு]

ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03