ரமா மேத்தா
ரமா மேத்தா (Rama Mehta) இந்திய சமூகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். எல்லாவற்றிற்கும் மேலாக 1977 ஆம் ஆண்டு இவர் எழுதிய இன்சைடு தி அவேலி நாவலுக்காக நினைவுகூரப்படுகிறார். நடுத்தர மற்றும் உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பாரம்பரியத்திற்கும் நவீன வாழ்க்கைக்கும் இடையிலான மோதலை இந்த நாவல் சித்தரிக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி ஆசிரியரின் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது.[1][2] இந்த புத்தகம் 1979 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதை [3] வென்றது.
இவரது முந்தைய படைப்புகளில் ராமு, எ இசுடோரி ஆஃப் இந்தியா (1966) மற்றும் தி லைஃப் ஆஃப் கேசாவ் (1969) ஆகியவை அடங்கும். இரண்டுமே சிறுவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. கண்காட்சிக்குச் செல்வதற்காகப் பள்ளியில் ஒரு நாளைத் தவறவிட்ட பிறகு பெற்றோர்களின் இதயப்பூர்வமான ஏமாற்றத்தைக் காணும் வரை, ராமு தனக்காகத் தன் பெற்றோர் செய்த தியாகங்களைப் புரிந்து கொள்வதேயில்லை.[4]
மேத்தாவின் விமர்சனக் கட்டுரையான மேற்கத்திய கல்வி படித்த இந்துப் பெண் (1970) என்ற கட்டுரையில் சுதந்திரத்தின் போது நன்றாகப் படித்த ஆங்கிலம் பேசும் இருபதுகளில் இருந்த பெண்கள் ஆங்கிலம் பேசாத அவர்களின் தாய்மார்களுக்கு இடையே இருந்த வேறுபாட்டை விவரிக்கிறது.[5] இவரது விவாகரத்து செய்யப்பட்ட இந்து பெண் (1975) விவாகரத்தை ஒரு பெண் ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் தீமைகளை வெளிப்படுத்துகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian English Literature" (PDF). Shivaji University, Kolhapur. Retrieved 27 March 2015.
- ↑ Antonia Navarro-Tejero. "Modern Indian Women Writers in English". Literature Study Online. Retrieved 27 March 2015.
- ↑ Writing the Female: Akademi Awarded Novels in English. Sarup & Sons.
- ↑ Meema G. Khorana. "Break Your Silence: A Call to Asian Indian Children's Writers" (PDF). Library Trends: Winter 1993. Archived from the original (PDF) on 2 ஏப்ரல் 2015. Retrieved 27 March 2015.
- ↑ Carroll, Berenice A. (1976). Liberating Women's History: Theoretical and Critical Essays. University of Illinois Press. pp. 196–. ISBN 978-0-252-00569-5.
- ↑ Menski, Werner. Modern Indian Family Law. Routledge. pp. 69–. ISBN 978-1-136-83985-6.