மோகனூர் பாலசுப்பிரமணியர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோகனூர் பாலசுப்பிரமணியர் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1] இக்கோயிலினை காந்தமலை முருகன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.[2][3] இக்கோயில் காந்தமலையில் குன்றின் மீது அமைந்துள்ளது. குன்றினை வாகனத்தில் சுற்றி வர தார்சாலை போடப்பட்டுள்ளது. கோயிலின் வலது புறத்தில் சென்றால் குன்றின் படிகளை ஏறாமல் கோயிலை அடையலாம்.

சாமிகள்[தொகு]

இத்தலத்தில் மூலவராக முருகன் உள்ளார். இந்த முருகன் பழனியில் உள்ளதைப் போன்று தண்டம் ஏந்தி காணப்படுகிறார். இக்கோயிலில் தட்சணாமூர்த்தி, பைரவர், காசிவிசுவநாதர், வல்லப கணபதி, வீரபாகு, சனீஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கும் இங்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவிழா[தொகு]

  • தைப்பூசம்
  • கந்த சஷ்டி
  • திருக்கார்த்திகை
  • பங்குனி உத்திரம்

ஆதாரங்கள்[தொகு]

  1. அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
  2. http://www.dinamani.com/edition_coimbatore/article1030472.ece
  3. http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2013/11/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%C2%A0/article1877136.ece

வெளி இணைப்புகள்[தொகு]