மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் என்பது தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் (1876-1950) அவர்களைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய நூலாகும். இந்நூல் மறைமலை அடிகள் நூற்றாண்டுப் போட்டியில் முதல்பரிசு பெற்ற சிறப்புடையதாகும். இதன் ஆசிரியர் பாவலர் சி. அன்பானந்தம். காலம் 20-ஆம் நூற்றாண்டு.