மனுமுறைகண்ட வாசகம்
தோற்றம்
மனுமுறைகண்ட வாசகம் என்பது வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் அருளிய இயற்றமிழ் நூலாகும்.[1] மனுநீதிச் சோழன் நீதி கேட்டு வந்த பசுவிற்காகத் தன் புதல்வனான வீதிவிடங்கனை தேர்க்காலில் ஏற்றி, அக்கன்று போல் மாய்த்துக் கொல்ல ஆணைபிறப்பித்தலும், சிவனருளால் சோழன் மகன் வீதிவிடங்கன் உயிர்ப்பிக்கப்பட்டதையும் கதையாகக் கூறும் நூலாகும். கதை முழுவதையும் ஒருசில வாக்கியங்களில் அமைத்திருப்பது சிறப்பாகும். தென் இந்திய சைவசித்தாந்தக் கழகம் இதனை வெளியிட்டது.[2]