போதி பார்பி அறுவடைத் திருவிழா
போதி பார்பி அறுவடைத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இந்திய மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ராமோ, பை - லிபோ, போகர் ஆகிய பழங்குடியினர் இயற்கையைப் போற்றிக் கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் விலங்குகளை பலியிடுவதும் உண்டு.[1]
பெயர்க்காரணம்[தொகு]
போதி பார்பி என்றொரு பறவை இருந்ததாகவும், வெகு தொலைவில் இருந்து வரும் அந்தப் பறவை அறுவடைக் காலத்தின்போது கீச்சிட்டதாகவும் நம்புகின்றனர். இவர்களிடத்தில் நாட்களை கணக்கிடும் முறை இல்லாத காரணத்தினால், இந்தப் பறவை தென்படும் காலத்தில் விழாவைக் கொண்டாடுகின்றனர்.[1]
விழா நிகழ்வுகள்[தொகு]
- வழக்கமான சடங்குகளை முடித்ததும், ஆண்களும் பெண்களும் விருந்தினர்க்கு ஒயினும் இன்ன பிற உணவுகளையையும் வழ்னக்குகின்றனர்.[1]
- பெரியோர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும், இளையோர் நடனமாடியும் களிக்கின்றனர்.[1]