பேச்சு:தொலைவுக் குறுக்கம்
தமிழ்ப் பழமொழிகள்
• கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும். • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா? • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல. • கழுதை அறியுமா கற்பூர வாசனை? • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல். • காகம் திட்டி மாடு சாகாது. • காய்த்த மரம்தான் கல்லடிபடும். • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல். • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். • குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம். • குரைக்கிற நாய் கடிக்காது. • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு. • கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல். • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம். • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல. • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல். • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது. • சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்? • தடியெடுத்தவன் தண்டக்காரன். • தம்பியுள்ளான் படைக்கஞ்சான். • தன் வினை தன்னைச் சுடும். • தனிமரம் தோப்பாகாது. • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு. • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன. • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். • தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல். • நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. • நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல். • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். • நிறைகுடம் நீர் தளும்பாது. • பசி வந்தால் பத்தும் பறந்திடும். • படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில். • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. • பனை மரத்தடியில் பால் குடித்தது போல. • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார். • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல். • புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான். • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும். • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார். • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். • மின்னுவதெல்லாம் பொன்னல்ல. • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல. • முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல். • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. • விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. • விரலுக்குத் தக்கதே வீக்கம். • விளையும் பயிர் முளையிலே தெரியும். • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். • வெளுத்ததெல்லாம் பாலல்ல. • வேலிக்கு ஓணான் சாட்சி. • வைக்கோற் போர் நாய் போல.