பேச்சு:தொலைவுக் குறுக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பழமொழிகள்

• கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும். 
• கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா? 
• கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். 
• கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல. 
• கழுதை அறியுமா கற்பூர வாசனை? 
• காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. 
• காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல். 
• காகம் திட்டி மாடு சாகாது. 
• காய்த்த மரம்தான் கல்லடிபடும். 
• காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல். 
• காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். 
• கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? 
• குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. 
• குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். 
• குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம். 
• குரைக்கிற நாய் கடிக்காது. 
• கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு. 
• கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல். 
• கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. 
• கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம். 
• சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல. 
• சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல். 
• சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது. 
• சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். 
• சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்? 
• தடியெடுத்தவன் தண்டக்காரன். 
• தம்பியுள்ளான் படைக்கஞ்சான். 
• தன் வினை தன்னைச் சுடும். 
• தனிமரம் தோப்பாகாது. 
• தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு. 
• தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. 
• தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன. 
• தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். 
• தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல். 
• நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? 
• நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். 
• நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. 
• நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல். 
• நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். 
• நிறைகுடம் நீர் தளும்பாது. 
• பசி வந்தால் பத்தும் பறந்திடும். 
• படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.    
• பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். 
• பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. 
• பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. 
• பனை மரத்தடியில் பால் குடித்தது போல. 
• பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். 
• பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார். 
• பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல். 
• புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான். 
• புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 
• பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும். 
• பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார். 
• போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. 
• மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 
• மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். 
• மின்னுவதெல்லாம் பொன்னல்ல. 
• முடக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. 
• முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல. 
• முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். 
• மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல். 
• யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 
• யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 
• விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. 
• விரலுக்குத் தக்கதே வீக்கம். 
• விளையும் பயிர் முளையிலே தெரியும். 
• வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். 
• வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். 
• வெளுத்ததெல்லாம் பாலல்ல. 
• வேலிக்கு ஓணான் சாட்சி.
• வைக்கோற் போர் நாய் போல.