பேச்சு:தமிழிசைக் கலைக்களஞ்சியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் மு. இளங்கோவன் தகவல்[தொகு]

[வீ.ப.கா.சுந்தரம்,[1]http://muelangovan.blogspot.com/2007/09/05091915-09032003.html]பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் உருவாக்கியது தமிழிசைக்கலைக்களஞ்சியம் ஆகும்.இது நான்கு தொகுதிகளைக்கொண்டது.முதல் தொகுதி(அ-ஔ) 1992 மார்ச்சுத் திங்களில் வெளிவந்தது.இரண்டாம் தொகுதி(க.ஞ) 1994 நவம்பரில் வெளியானது. - மூன்றாம் தொகுதி(த-ப) 1997 இல் வெளியானது.நான்காம் தொகுதி(ம-ய-வ) 2000 பிப்ரவரியில் வெளிவந்தது. - - இந்த நான்கு தொகுதிகளும் வெளிவர 12 ஆண்டுகள் ஆயின.ஆனால் பேராசிரியரின் வாழ்நாள் உழைப்பு இதில் அடங்கியுள்ளது.இதில் மொத்தம் 2,232 தலைப்புச்செய்திகள் அடங்கியுள்ளன.தமிழிசையின் தொன்மையும் ஆழமும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.இந்தக் களஞ்சியத்தில் இசை,நடனம், இசைக்கருவிகள்,பாடல் இயற்றியோர் வரலாறு,தமிழிசைக்குத் தொண்டு செய்தோர் வரலாறு முதலியன மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளன. தொல்காப்பியம்.சிலப்பதிகாரம்.அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழிசை வரலாற்றை மீட்டெடுக்கும் அரிய ஆவணங்களாக இத்தொகுதிகள் உள்ளன. - - மூன்று தொகுதிகள் எழுதி முடித்த நிலையில் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கிற்கு வந்த அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் உடல்நலக் குறைவுற்றார்.அதுபொழுது அங்குப் பணிபுரிந்த முனைவர் மு.இளங்கோவன் இசையறிஞருக்குப் பணிவிடை புரிந்தார்.அதன்பிறகு ஐயாவின் விருப்பப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் உதவியாளராகப் பணியமர்த்தப்பட்டு தமிழிழைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி எழுதி முடிக்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் மு.இளங்கோவன்

ஆம் அப்பெரும் தொகுதிகள் ஒப்பற்ற தமிழ்சைக் கலைக்களஞ்சியம். இத்தொகுதிகளை எழுதும் முன் தமிழிலக்கியத்தில் பழந்தமிழிசை என்னும் அவருடைய நூல் எழுதினார். அந்நூல் என்னிடம் உள்ளது. தம் வாழ்நாளை அரிய முறையில் தமிழிசை வரலாற்று அறிவுக்காகவும், இசை அறிவிற்காகவும் கொடையாக அளித்த‌ நல்லறிஞர். --செல்வா 14:05, 11 ஜூலை 2009 (UTC)